Sree Ranjani En Sivaranjani |
---|
ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி இந்த தேமாங்கனி உன் மடிமேல் இனி அடி நீர் மோகினி எந்தன் தேவதேவி நீ உன் சிந்தாமணி வண்ண மீனலோச்சனி கண்ணே வா நீ
ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி
ஆசை நீரோடைதான் கண்ணா நீ ஆழம் காணாததோ ஈரம் காயாமலே எப்போதும் பூமி நீராடுதோ சொன்னதில் ஏதேதோ அர்த்தம் இருக்கு இத்துடன் போதாதோ தர்க்கம் எதற்கு
வண்ண மீன் போலே நான் வட்டம் அடிப்பேன் மெல்லிடை நோகாமல் மெல்ல கடிப்பேன் அங்கும் இங்கும் தீண்டும் போது ஆசை தூண்டும்
ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி
வானில் மேகாலயம் இங்கே நம் வாழ்வின் வைபோகமோ காணும் சந்ரோதயம் இங்கேதான் காதல் ராஜாங்கமோ
கட்டிய பூமாலை நட்சத்திரமோ கண்மணி நீ சூடும் முத்துச்சரமோ மின்னல்கள் கல்யாண பந்தலிடுமோ வானவில் பொன்னுஞ்சல் கற்று தருமோ மண்ணுலகில் ஏது இந்த தேவலோகம்
ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி இந்த தேமாங்கனி உன் மடிமேல் இனி அடி நீர் மோகினி எந்தன் தேவதேவி நீ உன் சிந்தாமணி வண்ண மீனலோச்சனி கண்ணே வா நீ
ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி