Sugam Thanaa

Sugam Thanaa Song Lyrics In English


சுகம்தானா சொல்லு கண்ணே
அந்நியன் போல் நான் கேட்கிறேன்

சுகம்தானா பெண்கள் எல்லாம்
வந்தவள் போல் நான் கேட்கிறேன்

சுகம்தானா சொல்லு கண்ணே
அந்நியன் போல் நான் கேட்கிறேன்

சுகம்தானா பெண்கள் எல்லாம்
வந்தவள் போல் நான் கேட்கிறேன்

நான் தேடினால்
கோடி கோடி பெண் இல்லையா
நான் தேடினால்
கோடி கோடி பெண் இல்லையா
ஊடலாட நானில்லையா
ஊரில் என்ன வீடில்லையா
எந்த பெண்ணும் நீயாகுமா

பெண் என்பவள்
ஒன்றை மட்டும்தான் காண்கிறாள்
பெண் என்பவள்
ஒன்றை மட்டும்தான் காண்கிறாள்
ஒன்றை எண்ணித்தான் வாழ்கிறாள்
ஒருவன் தன்னைத்தான் சேர்க்கிறாள்
ஆண்மைக்கென்ன கற்பில்லையா
வந்தவள் போல் நான் கேட்கிறேன்
வந்தவள் போல் நான் கேட்கிறேன்

மணமானது
எந்தன் உள்ளம் தாயானது
மணமானது
எந்தன் உள்ளம் தாயானது
உங்கள் நெஞ்சம் பேயானது
கனியும் முன்பு காயானது
கொஞ்சிப் பார்க்க சேயில்லையே
கொஞ்சிப் பார்க்க சேயில்லையே

நீ சொன்னது
எண்ண எண்ண நிலை மாறுது
பிள்ளை ஒன்றை மனம் நாடுது
கொள்ளை இன்பம் உடல் தேடுது
ஒன்று சேர தடையில்லையேஏஏ


சுகம்தானா பெண்கள் எல்லாம்
வந்தவள் போல் நான் கேட்கிறேன்

சுகம்தானா சொல்லு கண்ணே
அந்நியன் போல் நான் கேட்கிறேன்

நாள் வந்தது
தெய்வம் வந்து என்னைக் கண்டது
தூது சொல்லி துணை நின்றது
மங்கை உன்னை தொடச்சொன்னது
இந்த நேரம் தடை இல்லையேஏஏ

எதை சொல்வது
சொந்தம்தானே சுகம் கேட்பது
வெட்கம் என்ன இதில் வந்தது
அக்கம் பக்கம் யார் பார்த்தது
பெண்மைக்கின்று பயமில்லையே

சுகம்தானா சொல்லு கண்ணே
அந்நியன் போல் நான் கேட்கிறேன்

சுகம்தானா பெண்கள் எல்லாம்
வந்தவள் போல் நான் கேட்கிறேன்