Sumai Thangiye Nindru |
---|
ஆஆஆஆஅஆஆ சுமை தாங்கியே நின்று விழுகின்றது பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது
சுமை தாங்கியே நின்று விழுகின்றது பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது
சுமை தாங்கியே நின்று விழுகின்றது
மணமாலை சூடும் திருநாளை எண்ணி மனதுக்குள் நீராடினாள் இவள் மனதுக்குள் நீராடினாள் மணமாலை சூடும் திருநாளை எண்ணி மனதுக்குள் நீராடினாள் இவள் மனதுக்குள் நீராடினாள்
அந்த நீரோடை காயும் நிலை வந்ததாலே தனக்குள்ளே போராடினாள் கரையான் அரிக்கின்ற வேராகினாள் கரையான் அரிக்கின்ற வேராகினாள்
சுமை தாங்கியே நின்று விழுகின்றது பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது
சுமை தாங்கியே நின்று விழுகின்றது
முடிவான பாதை தெரியாத வேளை அடிவானில் இருள் நீங்குமா ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா முடிவான பாதை தெரியாத வேளை அடிவானில் இருள் நீங்குமா ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா
சிறு மணல் வீடு செய்து விளையாடும்போது புயலோடு மழை வந்தது வாழ்க்கை கலைந்தோடும் முகிலானது வாழ்க்கை கலைந்தோடும் முகிலானது
சுமை தாங்கியே நின்று விழுகின்றது பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது
சுமை தாங்கியே நின்று விழுகின்றது