Sumai Thangiye Nindru

Sumai Thangiye Nindru Song Lyrics In English


ஆஆஆஆஅஆஆ சுமை தாங்கியே நின்று விழுகின்றது பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது

சுமை தாங்கியே நின்று விழுகின்றது பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது

சுமை தாங்கியே நின்று விழுகின்றது

மணமாலை சூடும் திருநாளை எண்ணி மனதுக்குள் நீராடினாள் இவள் மனதுக்குள் நீராடினாள் மணமாலை சூடும் திருநாளை எண்ணி மனதுக்குள் நீராடினாள் இவள் மனதுக்குள் நீராடினாள்

அந்த நீரோடை காயும் நிலை வந்ததாலே தனக்குள்ளே போராடினாள் கரையான் அரிக்கின்ற வேராகினாள் கரையான் அரிக்கின்ற வேராகினாள்

சுமை தாங்கியே நின்று விழுகின்றது பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது


சுமை தாங்கியே நின்று விழுகின்றது

முடிவான பாதை தெரியாத வேளை அடிவானில் இருள் நீங்குமா ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா முடிவான பாதை தெரியாத வேளை அடிவானில் இருள் நீங்குமா ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா

சிறு மணல் வீடு செய்து விளையாடும்போது புயலோடு மழை வந்தது வாழ்க்கை கலைந்தோடும் முகிலானது வாழ்க்கை கலைந்தோடும் முகிலானது

சுமை தாங்கியே நின்று விழுகின்றது பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது

சுமை தாங்கியே நின்று விழுகின்றது