Sumangali Poojai Idhu |
---|
நித்யானந்தகாரி வராபயகாரி
சௌந்தர்ய ரத்னாகாரி நிர்தூதாகில
கோர பாபனிகாரி பிரத்யக்ஷ
மாதேஸ்வரி ப்ராலேயாச்சல
வம்ச பாவனகாரி காசி புராதீச்வரி
பிக்ஷாம்தேஹி கிருபாவலம்பனகாரி
மாதான்ன பூர்நேஸ்வரி
சுமங்கலி பூஜை இது
சுகம் தரும் வேலை இது தேவி
என் தாயே தயை புரிவாயே
பூவையர் பூவை காப்பவள் நீயே
பாவையர் போற்றி வரும்
ஆஆஆ
சுமங்கலி பூஜை
இது சுகம் தரும் வேலை
இது
நாயகன் பொன்மேனி
நீங்காமல் வாழும் நாயகி நீ
கூட பெண்ணில்லையோ நான்
படும் துன்பங்கள் அறியாயோ
நீயே பார்த்திட என் போல
கண்ணில்லையோ
காவலின் நியாயங்கள்
வாடுவதோ பொய்களும் பூ
மாலை சூடுவதோ சத்தியங்கள்
வாழாமல் சாவதுண்டோ
தத்துவங்கள் தவறாக
போவதுண்டோ
காட்சியும் சாட்சியும்
நீயடி நாச்சியம்மா மங்கள
மங்கையின் மஞ்சளும் தங்கிட
மலை மகளே வரம் அருளே
சுமங்கலி பூஜை
இது சுகம் தரும் வேலை
இது
ஆணவம் அகங்காரம்
அநியாயம் யாவும் தேவி உன்
அருளாலே தூளாகுமே கோழைகள்
கை ஏந்தும் கொடுங்கோலை சாய்க்க
ஏழையின் கண்ணீரும் வாளாகுமே
பாவையர் மேன்மைகள்
பாரடியோ நீதியை நீ வந்து
கூறடியோ கண்ணகிக்கும்
என் போல ஆனதடி தென்
மதுரை தீயாகி போனதடி
அந்தரி சுந்தரி சங்கரி
சௌந்தரியே நெற்றியின்
குங்குமம் வெற்றியை
பெற்றிட மலை மகளே
வரமருளே
நாயகன் கைத்தலம்
பற்றிய பைங்கொடி வாழ்க
வாழ்கவே நல்லற நாயகி
இல்லற மங்களம் வாழ்க
வாழ்கவே
உத்தம பத்தினி சத்திய
புத்திரி வாழிய வாழியவே
கண் மலர் வாடிய பெண்
மலர் குங்குமம் வாழிய
வாழியவே
கற்புடன் மங்கையர்
அற்புத சக்திகள் வாழிய
வாழியவே மெய் குழல்
சூடிய மல்லிகை பூச்சரம்
வாழிய வாழியவே
மாலை சூடிய மன்னன்
வாழிய மன்னன் தேடிய மங்கை
வாழிய நாளும் வாழ்கவே தன்
நாதன் கூடவே
காதல் நெஞ்சில் ஏற்றி
வைத்த தீபம் வாழ்கவே
மஞ்சள் வண்ணம்
மின்னுகின்ற ரூபம்
வாழ்கவே