Thaai Thindra Mannae (The Cholan Ecstasy)

Thaai Thindra Mannae (The Cholan Ecstasy) Song Lyrics In English


தாய் தின்ற மண்ணே
இது பிள்ளையின் கதறல்
ஒரு பேர் அரசன் புலம்பல்

தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே
பிள்ளையின் கதறல்
பிள்ளையின் கதறல்
ஒரு பேர் அரசன் புலம்பல்
ஒரு பேர் அரசன் புலம்பல்


நெல் ஆடிய நிலம் எங்கே
சொல் ஆடிய அவை எங்கே
வில் ஆடிய களம் எங்கே
கல் ஆடிய சிலை எங்கே
தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணேஏ

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்

தா தின் கா
திக்கா தக்கா
தா
திற நென தா
ஜிக தக்க தா

கயல் விளையாடும்
வயல் வெளி தேடி
காய்ந்து கழிந்தன
கண்கள்

காவிரி மலரின்
கடி மனம் தேடி
கருகி முடிந்தது
நாஆசி

சிலை வடி மேவும்
உளி ஒலி தேடி
திருகி விழுந்தன
செவிகள்

ஊன் பொதி சோற்றின்
தேன் சுவை கருதி
ஒட்டி உலர்ந்தது
நாவும் ம்ம்ம்ம்

புலிக் கொடி பொறித்த
சோழ மாந்தர்கள்
எலிக் கறி கொறிப்பதுவோஓஓ
காற்றை குடிக்கும்
தாவரம் ஆகி
காலம் கழிப்பதுவோஓஓ

மண்டை ஓடுகள்
மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ ஓ
மன்னன் ஆளுவதோ
ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ


தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணேஏஏ



நொறுங்கும் உடல்கள்
பிதுங்கும் உயிர்கள்
அழுகும் நாடு
அழுகின்ற அரசன்

பழம் தின்னும் கிளியோ
பிணம் தின்னும் கழுகோ
தூதோ முன் வினை தீதோ
களங்கலும் அதிர
களிருகள் பிளிர
சோழம் அழைத்து போவாயோ

தங்கமே என்னை
தாய் மண்ணில் சேர்த்தால்
துறவிகள் போலே
புரண்டிருப்போம்

ஆயிரம் ஆண்டுகள்
சேர்த்த கண்ணீரை
அருவிகள் போலே
அழுதிருப்போம்

அது வரை
அது வரை
ஓ ஓ ஓ ஹோ ஓஒ

தமிழர் காணும் துயரம் கண்டு
தலையை சுற்றும் கோளே அழாதே
என்றோ ஒரு நாள் விடியும் என்றே
இரவை சுமக்கும் நாளே அழாதே

நூற்றாண்டுகளின் துருவை தாங்கி
உறையில் தூங்கும் வாளே அழாதே
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ
என்னோடழும் யாழே அழாதேஏஏ


நெல் ஆடிய நிலம் எங்கே
சொல் ஆடிய அவை எங்கே
வில் ஆடிய களம் எங்கே
கல் ஆடிய சிலை எங்கே
தாய் தின்ற மண்ணே
இது பிள்ளையின் கதறல்
ஒரு பேர் அரசன் புலம்பல்