Thaalaatu Maari Male |
---|
தாலாட்டு மாறிப்போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு
என் தோளில் கண்மூடு
என் சொந்தம் நீ
தாலாட்டு மாறிப்போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
உன் சோகம் என் ராகம்
ஏன் என்று கேட்கிறாய்
பெண் மானே செந்தேனே
யாரென்று பார்க்கிறாய்
உன் அன்னை நான் தானே
என் பிள்ளை நீ தானே இது போதுமே
தாலாட்டு மாறிப்போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு
என் தோளில் கண்மூடு
என் சொந்தம் நீ
தாலாட்டு மாறிப்போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
கண்ணீரில் சந்தோஷம்
நானிங்கு காண்கிறேன்
தாயாக இல்லாமல்
தாலாட்டு பாடினேன்
என் வாழ்வே உன்னோடு
என் தோளில் கண் மூடு சுகமாயிரு
தாலாட்டு மாறிப்போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு
என் தோளில் கண்மூடு
என் சொந்தம் நீ
தாலாட்டு மாறிப்போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
ஆராரோ ஆரிராரிரோ ஆராரோ ஆரிராரிரோ