Thaali Ondru Thaevai Enna |
---|
தாலி ஒன்று தேவையென்ன
மானசீக வாழ்வில்
தாலி ஒன்று தேவையென்ன
மானசீக வாழ்வில்
தர்மம் என்னும் சன்னதியில்
காதல் ஒன்று போதுமடி
தாலி ஒன்று தேவையென்ன
மானசீக வாழ்வில்
சேவை செய்ய நினைத்த மனம்
வேறெதையும் நினைப்பதில்லை
தெய்வம் தந்த வழி நடந்தால்
எந்நாளும் தனிமை இல்லை
பார்வதிக்கு கங்கை வந்தாள்
தேவியுடன் வள்ளி வந்தாள்
நானும் ஒரு கங்கையல்ல
நாயகனும் சிவனுமல்ல
தாலி ஒன்று தேவையென்ன
மானசீக வாழ்வில்
சிந்தனையில் வாழ்ந்திருந்தால்
தெய்வ சுகம் கோடி வரும்
சேராத வாழ்வினிலும்
கண்ணீரில் கவிதை வரும்
உள்ளிருக்கும் கோயிலிலே
ஓரிறைவன் குடியிருக்க
ஊரார்க்கும் காட்சியென்ன
உண்மைக்கும் சாட்சியென்ன
தாலி ஒன்று தேவையென்ன
மானசீக வாழ்வில்
கற்பரசி நீயிருக்க
கண்ணகியைப் போலிருக்க
இன்னும் ஒரு காதலியா
நானென்ன மாதவியா
உன் நிழலை பார்க்கையிலே
கல்லெல்லாம் உருகுமடி
என் கதையை விட்டுவிடு
என்னோடு முடியுமடி
தாலி ஒன்று தேவையென்ன
மானசீக வாழ்வில்