Thaangaliye Aatha

Thaangaliye Aatha Song Lyrics In English


தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்
தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்
வீசிப்புட்டே எம் மேலே அம்புதான்
வாங்கிக்கிட்டேன் வேறென்ன அன்புதான்
சாமி மேல ஆணையாக
என்னாச்சு என்னாச்சு சொல்லுவேன் நான்
சொன்ன போதும் நம்ப மாட்டே
சொல்லாம உள்ளாற மெல்லுறேன் நான்

தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்
தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்
தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்

ஒத்த மாட்டு வண்டி கட்டி
ஓட்டிப் பாக்க ஆசை கொண்டேன்
சொந்த மாட்டை விட்டு விட்டு
வந்த மாட்டை ஏற்றுக் கொண்டேன்
ஊர் விட்டு ஊர் வந்த பொட்டப் புள்ள
ஓயாம செஞ்சாளே அன்புத் தொல்லை
வேர் விட்டு நீர் விட்டு வெச்சக் காதல்
பூக்காம காய்க்காம வாடிப் போச்சே
ஆகாத வீட்டிலே ஆனேனே மாப்பிள்ளை
ஆகாத வீட்டிலே ஆனேனே மாப்பிள்ளை
எல்லாமே விதிப் படி நடக்குதடா

தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்
தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்
வீசிப்புட்டே எம் மேலே அம்புதான்
வாங்கிக்கிட்டேன் வேறென்ன அன்புதான்
சாமி மேல ஆணையாக
என்னாச்சு என்னாச்சு சொல்லுவேன் நான்
சொன்ன போதும் நம்ப மாட்டே
சொல்லாம உள்ளாற மெல்லுறேன் நான்

தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்
தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்
தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்


தங்கக் காசு செப்பானது
வைரக் கல்லு உப்பானது
நல்ல உள்ளம் செஞ்சதெல்லாம்
நாலு பேர்க்கு தப்பானது
முள் மேலே வாழைதான் பட்ட போதும்
வாழை மேல் முள் வந்து தொட்ட போதும்
எப்போதும் வாழைதான் காயமாகும்
என்றாலும் இது என்ன நியாயமாகும்
என் ஆத்தா அறியுமா என் பாவம் புரியுமா
என் ஆத்தா அறியுமா என் பாவம் புரியுமா
எல்லாமே விதிப்படி நடக்குதடா

தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்
தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்
வீசிப்புட்டே எம் மேலே அம்புதான்
வாங்கிக்கிட்டேன் வேறென்ன அன்புதான்
சாமி மேல ஆணையாக
என்னாச்சு என்னாச்சு சொல்லுவேன் நான்
சொன்ன போதும் நம்ப மாட்டே
சொல்லாம உள்ளாற மெல்லுறேன் நான்

தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்
தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்
வீசிப்புட்டே எம் மேலே அம்புதான்
வாங்கிக்கிட்டேன் வேறென்ன அன்புதான்