Thaayin Madiyil Thalai Vaithirundhaal

Thaayin Madiyil Thalai Vaithirundhaal Song Lyrics In English


எத்தனை செல்வங்கள் வந்தாலுமே
எத்தனை இன்பங்கள் தந்தாலுமே
அத்தனையும் ஒரு தாயாகுமா
அம்மாஅம்மாஅம்மா
எனக்கது நீயாகுமா

தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
துயரம் தெரிவதில்லை
தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால்
வேறொரு தெய்வமில்லை
வேறொரு தெய்வமில்லை

தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை

பத்து மாதம் பொறுமை வளர்த்தே
பூமியை மிஞ்சிடுவாள்
பூமியை மிஞ்சிடுவாள்
வெள்ளை மனதை தொட்டிலாக்கி
வெள்ளை மனதை தொட்டிலாக்கி
பிள்ளையைக் கொஞ்சிடுவாள்ஆஅஆ
பிள்ளையைக் கொஞ்சிடுவாள்


தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை

அன்பில் மலரும் அற்புதமெல்லாம்
அன்னையின் விளையாட்டு
அலையும் மனதை அமைதியில் வைப்பது
அன்னையின் தாலாட்டு

என்னைப் பார்த்த அன்னை முகத்தை
ஏழை பார்த்ததில்லை
என்னைப் பார்த்த அன்னை முகத்தை
ஏழை பார்த்ததில்லை
கண்ணே கண்ணே கண்ணே என்று
கொஞ்சிய வார்த்தை காதில் கேட்டதில்லை
காதில் கேட்டதில்லை
காதில் கேட்டதில்லை