Thaedi Ennai Kaanave |
---|
தேடி என்னைக் காணவே
தெருவில் வந்த தெய்வமே
தேடி என்னைக் காணவே
தெருவில் வந்த தெய்வமே
தெருப் புழுதி போல
என் வாழ்க்கை போக
அர்த்தம் என வந்தாயோ
அன்னை என நின்றாயோ
தேடி என்னைக் காணவே
தெருவில் வந்த தெய்வமே
அன்புக்கென எனக்காரோ
எங்கும் அதைக் கண்டேனா
அன்னை முகத்தை அறிந்தாலும்
அன்பின் ஆழம் அறிவேனா
கள்ளம் இல்லா உள்ளம் தன்னை
காட்ட வந்த தெய்வமே
சொல் இழந்தே சோர்ந்து நின்றேன்
நல்ல வாக்குத் தா
தேடி என்னைக் காணவே
தெருவில் வந்த தெய்வமே
தேடி என்னைக் காணவே
தெருவில் வந்த தெய்வமே