Thaen Paayum Velai

Thaen Paayum Velai Song Lyrics In English


தேன் பாயும் வேலை
செவ்வான மாலை
பூந்தென்றல் தாலாட்டு பாடும்
தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்

காதல் வெள்ளம் கண்ணோடு மோதும்
உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும்

தேன் பாயும் வேலை
செவ்வான மாலை
பூந்தென்றல் தாலாட்டு பாடும்
தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்

காதல் வெள்ளம் கண்ணோடு மோதும்
உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும்

ஒரு கோடி ஜென்மம்
நான் கொண்ட போதும்
நீயே என் துணையாக வேண்டும்

ஆஅஆஅபூவாக நானும்
பிறக்கின்ற போதும்
பணியாக நீ போற்ற வேண்டும்

பாவை உந்தன் பாதை
அதில் நிழலாக வருவேன் அம்மா

வண்ண பூ வசந்தம்
நெஞ்சில் தேன் பொழியும்

உந்தன் பூங்கரங்கள்
என்னை மாலை இடும்

தேன் பாயும் வேலை
செவ்வான மாலை
பூந்தென்றல் தாலாட்டு பாடும்
தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்


காதல் வெள்ளம் கண்ணோடு மோதும்
உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும்

மேகங்கள் வானில்
இணைகின்ற போது
ஒளிவீசும் புது மின்னல் தோன்றும்

ஆஅதேகங்கள் ரெண்டும்
தொடுகின்ற போது
மோகங்கள் அலை போல மோதும்

மையல் கொண்ட தையல்
உன் மார்போடு விளையாடுது

உந்தன் மான் விழியே
சந்தம் பாடிடுதே

இன்ப காவேரியே
நெஞ்சில் பாய்கிறதே

தேன் பாயும் வேலை
செவ்வான மாலை
பூந்தென்றல் தாலாட்டு பாடும்
தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்

இருவர் : காதல் வெள்ளம் கண்ணோடு மோதும்
உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும்