Thagamey Undanathe |
---|
தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே
உனைத் தொட தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே
என் தேகமேபூ மேடையே
தேரேறி நீ வா வா
உனைத் தொட தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே
நெஞ்சு துடிக்குதடி
உடல் வெந்து கொதிக்குதடி
உந்தன் சின்ன மணி இதழ்
நித்தம் குளித்திட
பங்கிடு பச்சக்கொடி
எந்தன் மடி மீது
துள்ளி வந்துக் குடியேறு
அந்த மன்மத மந்திர வேதம்
முழுவதும் சொல்லி விளையாடு
மல்லிகைக் கூந்தலை
மெல்லத் தரையினில்
பஞ்சணை போடடியோ
லாலலல் லல்லல்ல
லாலலல் லல்லல்லா
வேகமோ மோகமோ
மங்கள நேரத்தில்
சங்கம காலத்தில்
தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே
என் தேகமே
ஹ்ம்ம்
பூ மேடையே
ஹ்ம்ம்ம்
தேரேறி நீ வா வா
உனைத் தொட தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே
அந்தி வரும் பொழுது
விழி காணும் வண்ணக்கனவு
இந்த சந்தன மேனிக்குள்
செந்தனல் ஊற்றுக்குள்
ஊறும் பல இரவு
கொஞ்சும் இளமயிலே வரும்
கோலம் இளமயிலே
வண்டு முத்திரை வைத்திட
அத்தனைப் பூக்களும்
ஏங்கும் தனிமையிலே
முத்துக் குளிக்கையில்
தங்க மணிக்கரம்
என்னைச் சிறையிடுமோ
லாலலல் லல்லல்ல
லாலலல் லல்லல்லா
நாணமோ தோணுமோ
இந்த இளம் குயில்
உன்னைத் தழுவிட
தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே
உனைத் தொடதாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே
என் தேகமே
ஹ்ம்ம்
பூ மேடையே
ஹ்ம்ம்ம்
தேரேறி நீ வா வா
உனைத் தொட தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே