Thai Illamal Naan |
|---|
தாய் இல்லாமல்
நான் இல்லை தானே
எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு
தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை
காக்கின்றாள்
தாய் இல்லாமல்
நான் இல்லை
ஜீவ நதியாய்
வருவாள் என் தாகம்
தீர்த்து மகிழ்வாள்
தவறினை பொறுப்பாள்
தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம்
சேர்த்திடுவாள்
தாய் இல்லாமல்
நான் இல்லை
தூய நிலமாய்
கிடப்பாள் தன் தோளில்
என்னை சுமப்பாள்
தன்மையில்லாமல்
நான் மிதித்தாலும்
தாய்மையிலே மனம்
கனிந்திடுவாள்
தாய் இல்லாமல்
நான் இல்லை
மேக வீதியில்
நடப்பாள் உயிர் மூச்சினிலே
கலந்திருப்பாள்
மலை முடி
தொடுவாள் மலர்
மணம் தருவாள்
மங்கல வாழ்வுக்கு
துணை இருப்பாள்
தாய் இல்லாமல்
நான் இல்லை
ஆதி அந்தமும்
அவள் தான் நம்மை
ஆளும் நீதியும்
அவள் தான்
அகந்தையை
அழிப்பாள் ஆற்றலை
கொடுப்பாள் அவள்
தான் அன்னை மகாசக்தி
அந்த இல்லாமல்
நான் இல்லை தானே
எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு
தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை
காக்கின்றாள்
தாய் இல்லாமல்
நான் இல்லை
