Thalai Vaari Poochoodum

Thalai Vaari Poochoodum Song Lyrics In English


தலை வாரி பூச்சூடும் இளந்தென்றலே
தரை மீது வந்தாடும் கொடி மின்னலே
அண்ணன் எனது கண்ணில் எழுந்த
வண்ணக்கனவே வஞ்சி நிலவே
நாம் எங்கு வாழ்ந்தாலும் நீங்காது பாசம்

தலை வாரி பூச்சூடும் இளந்தென்றலே
தரை மீது வந்தாடும் கொடி மின்னலே

மலர் மாலை மாங்கல்யம் நாளை வரும்
மணவாளன் துணை சேரும் நேரம் வரும்
ஆஅ எல்லோரும் உன்னை வாழ்த்தும் காலம் வரும்
என் கண்ணில் ஆனந்த கண்ணீர் வரும்
தங்கை ஒரு தாயாய் பிள்ளை பெறலாம்
பிள்ளைக்கு இந்த மாமன் சீர்கள் தரலாம்
நான் அந்த திருநாளை எதிர்பார்க்கிறேன்

தலை வாரி பூச்சூடும் இளந்தென்றலே
தரை மீது வந்தாடும் கொடி மின்னலே
அண்ணன் எனது கண்ணில் எழுந்த
வண்ணக்கனவே வஞ்சி நிலவே
நாம் எங்கு வாழ்ந்தாலும் நீங்காது பாசம்

தலை வாரி பூச்சூடும் இளந்தென்றலே
தரை மீது வந்தாடும் கொடி மின்னலே


உயிரே நாம் உறவென்னும் அகராதியில்
பிரிவென்னும் ஒரு வார்த்தை கிடையாதம்மா
ஆஅ ஒன்றாக இருக்கின்ற ஆகாயம் தான்
ஒரு போதும் இரண்டாக உடையாதம்மா
வாடி விட கூடும் வாச மலர் தான்
வாடுவது ஏது பாசமலர் தான்
மாறாது மறையாது மனம் வீசுமே

தலை வாரி பூச்சூடும் இளந்தென்றலே
தரை மீது வந்தாடும் கொடி மின்னலே
அண்ணன் எனது கண்ணில் எழுந்த
வண்ணக்கனவே வஞ்சி நிலவே
நாம் எங்கு வாழ்ந்தாலும் நீங்காது பாசம்