Thalai Vaari Poochoodum |
---|
தலை வாரி பூச்சூடும் இளந்தென்றலே
தரை மீது வந்தாடும் கொடி மின்னலே
அண்ணன் எனது கண்ணில் எழுந்த
வண்ணக்கனவே வஞ்சி நிலவே
நாம் எங்கு வாழ்ந்தாலும் நீங்காது பாசம்
தலை வாரி பூச்சூடும் இளந்தென்றலே
தரை மீது வந்தாடும் கொடி மின்னலே
மலர் மாலை மாங்கல்யம் நாளை வரும்
மணவாளன் துணை சேரும் நேரம் வரும்
ஆஅ எல்லோரும் உன்னை வாழ்த்தும் காலம் வரும்
என் கண்ணில் ஆனந்த கண்ணீர் வரும்
தங்கை ஒரு தாயாய் பிள்ளை பெறலாம்
பிள்ளைக்கு இந்த மாமன் சீர்கள் தரலாம்
நான் அந்த திருநாளை எதிர்பார்க்கிறேன்
தலை வாரி பூச்சூடும் இளந்தென்றலே
தரை மீது வந்தாடும் கொடி மின்னலே
அண்ணன் எனது கண்ணில் எழுந்த
வண்ணக்கனவே வஞ்சி நிலவே
நாம் எங்கு வாழ்ந்தாலும் நீங்காது பாசம்
தலை வாரி பூச்சூடும் இளந்தென்றலே
தரை மீது வந்தாடும் கொடி மின்னலே
உயிரே நாம் உறவென்னும் அகராதியில்
பிரிவென்னும் ஒரு வார்த்தை கிடையாதம்மா
ஆஅ ஒன்றாக இருக்கின்ற ஆகாயம் தான்
ஒரு போதும் இரண்டாக உடையாதம்மா
வாடி விட கூடும் வாச மலர் தான்
வாடுவது ஏது பாசமலர் தான்
மாறாது மறையாது மனம் வீசுமே
தலை வாரி பூச்சூடும் இளந்தென்றலே
தரை மீது வந்தாடும் கொடி மின்னலே
அண்ணன் எனது கண்ணில் எழுந்த
வண்ணக்கனவே வஞ்சி நிலவே
நாம் எங்கு வாழ்ந்தாலும் நீங்காது பாசம்