Thalai Vazhai |
---|
தலைவாழை இலை போட்டு
விருந்து வைத்தேன்
என் தலைவா உன் வருகைக்கு
தவம் இருப்பேன்
தலைவாழை இலை போட்டு
விருந்து வைத்தேன்
என் தலைவா உன் வருகைக்கு
தவம் இருப்பேன்
நீ உண்டால் என் பசியாறும்
என்றிருப்பேன்
நீ உண்டால் என் பசியாறும்
என்றிருப்பேன்
உன் வழி மீது விழி வைத்து நின்றிருப்பேன்
உன் வழி மீது விழி வைத்து நின்றிருப்பேன்
தலைவாழை இலை போட்டு
விருந்து வைத்தேன்
என் தலைவா உன் வருகைக்கு
தவம் இருப்பேன்
மனையறம் தனை காக்க நான் இருக்க
என் துணைக்கரம் என என்றும் நீ இருக்க
மனையறம் தனை காக்க நான் இருக்க
என் துணைக்கரம் என என்றும் நீ இருக்க
இல்லறம் நலமாக துலங்காதோ
இல்லறம் நலமாக துலங்காதோ
புவி இன்பம் எல்லாம் இங்கு விளங்காதோ
தலைவாழை இலை போட்டு
விருந்து வைத்தேன்
என் தலைவா உன் வருகைக்கு
தவம் இருப்பேன்
கதிரவன் முகம் பார்க்கும்
தாமரையும்
தன் காதலை எதிர்பார்க்கும்
பெண் மனமும்
ஓரினம் என்பதுதான் புரியாதோ
ஓரினம் என்பதுதான் புரியாதோ
என் ஒரு மனம் உனக்கென்று தெரியாதோ
என் ஒரு மனம் உனக்கென்று தெரியாதோ
ஒரு மனம் உனக்கென்று தெரியாதோ
தலைவாழை இலை போட்டு
விருந்து வைத்தேன்
என் தலைவா உன் வருகைக்கு
தவம் இருப்பேன்
கொடியினில் பிறந்தது மலரொன்று
அதன் குளிர் விழி மலர்ந்தது நிலவென்று
மடியினில் தவழ்ந்தது உன்னை கண்டு
தன் இதழ்களில் உனக்கென தென் கொண்டு
ஆஆஅஆஆஅஆஅஆஅஹா
மஞ்சள் கொஞ்சிடும் மாங்கல்யம்
அது மங்கையர்க்கெல்லாம் பெரும் செல்வம்
மஞ்சள் கொஞ்சிடும் மாங்கல்யம்
அது மங்கையர்க்கெல்லாம் பெரும் செல்வம்
கண்ணுக்கு நிறைந்த கணவனை தவிர
கண்ணுக்கு நிறைந்த கணவனை தவிர
பெண்ணுக்கு ஏது ஒரு தெய்வம்
பெண்ணுக்கு ஏது ஒரு தெய்வம்