Thalaiva Thavaputhalvaa |
---|
தலைவா தவப்புதல்வா வருகவே
தலைவா தவப்புதல்வா வருகவே
உந்தன் தாமரைத்தாள் பணிந்தேன் வாழ்கவே
தலைவா தவப்புதல்வா வருகவே
உந்தன் தாமரைத்தாள் பணிந்தேன் வாழ்கவே
நிலையான புகழ் கொண்ட கலைச் செல்வமே
ஆஆஆஆஆஆஆஆஆஆஹாஆ
நிலையான புகழ் கொண்ட கலைச் செல்வமே
நிறைவான குணக்குன்றே அருள் வெள்ளமே
நிலையான புகழ் கொண்ட கலைச் செல்வமே
நிறைவான குணக்குன்றே அருள் வெள்ளமே
நெடுங்காலமாய் வணங்காமுடி
நெடுங்காலமாய் வணங்காமுடி
இலங்கேசனைப் புறங்காணவே
நீயல்லாது யாழில் வேறு யார் வெல்வார் ஈரேழுலகிலுமே
தலைவா தவப்புதல்வா வருகவே
உந்தன் தாமரைத்தாள் பணிந்தேன் வாழ்கவே
உருவில் குறள் நீயே அறிவில் மலை நீயே
கருணை முகில் நீயே கந்தனின் தமிழ் நீயே
உருவில் குறள் நீயே அறிவில் மலை நீயே
கருணை முகில் நீயே கந்தனின் தமிழ் நீயே
அலைகடல் ஏழையும் குடித்து
அருந்தமிழ் இலக்கணம் படித்து
மலையின் மமதையை அழித்து
வாதாபியின் ஆயுளை முடித்து
வானவர் புகழும் மானிடர் நலனும்
தானமும் தவமும் ஞானமும் பலனும்
வானவர் புகழும் மானிடர் நலனும்
தானமும் தவமும் ஞானமும் பலனும்
வேதமும் ஆகம போதமும் சீர்தர
விளங்க மிகுந்த வரங்கள் வழங்கிடும்
தலைவா தவப்புதல்வா வருகவே
உந்தன் தாமரைத் தாள் பணிந்தேன் வாழ்கவே