Thalaivane Un Mugam |
---|
மனம் கவர்ந்த மன்னவனே
மலரெழுதும் கடிதம் இது
உன்னைப் பார்த்து ஒரு பேதை மகள்
பரிதவிக்கும் சேதி இது
இதயத்தில் உன்னை மட்டும்
ஒளித்து வைத்தேன்
இன்று இதயத்தை காகிதத்தில்
இறக்கி வைத்தேன்
தலைவனே உன் முகம் பார்த்தேன்
தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன்
தலைவனே உன் முகம் பார்த்தேன்
தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன்
பார்வையில் காமன் நீ
ஆண்மையில் ராமன் நீ
அழகனேஏஏ
தலைவனே உன் முகம் பார்த்தேன்
தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன்
பொன்னான தேகமே
செந்தூரம் ஆகுமே
உன் தோள்கள் பார்க்கவே
ஆண்டொன்று வேண்டுமே
அரும்புதான் மீசையோ
அதற்குதான் ஆசையோ
கன்னிப் பெண்ணுக்கு மாலை வருமா
எண்ணி தவித்தேன் ஓலை வருமா
நான் உன்னை பார்க்கவே
நாள்தோறும் ஏங்கினேன்
நீ போகும் பாதையில்
பூவாக தூங்கினேன்
தலைவனை நினைந்ததால்
தலையணை நனைந்ததே
பதில் வருமா காத்துக் கிடப்பேன்
வாசல்படியில் பூத்துக் கிடப்பேன்
தலைவனே உன் முகம் பார்த்தேன்
தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன்
பார்வையில் காமன் நீ
ஆண்மையில் ராமன் நீ
அழகனேஏஏ
தலைவனே உன் முகம் பார்த்தேன்
தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன்