Thalakaalu Puriyalaiyae

Thalakaalu Puriyalaiyae Song Lyrics In English


என் கண்ணெல்லாம்
உன்னை தேடி பாக்க என்
நெனப்பெல்லாம் உன்னை
பத்தி கேக்க

வந்தேன் எதிர்பாத்து
வந்தேனே நின்னேன்
எதிர்காத்தில் நின்னேனே

தலகாலு
புரியலையே தரைமேல
நிக்கலையே ஒரு நாளும்
இதுபோல மனசெல்லாம்
பூக்கலையே

வெள்ளாட்டு
மணியை போல
நெஞ்சோரம் பேசி
போறே வெங்காட்டு
கோரை போல காய
வைக்கிறியே

கிடாரியே உன்
போல ஊருக்குள் யாரும்
இல்லை கிடாரியே உன்னால
யாருக்கும் தூக்கம் இல்லை

மனச மனசால
அலச நெனச்சேனே உன்
மீசை நுனியினிலே நான்
தூங்க தவிக்குறேன்

உசுர உசுராலே
உரச நெனச்சேனே உன்
நெருப்பு கண்ணுல நான்
உருக துடிக்குறேன்


ஊடு பாயும்
விரல்கள் குத்தீட்டி
தானுங்க இன்னும்
என்ன சொல்ல
பத்தாட்டி கேளுங்க

தலகாலு
புரியலையே தரைமேல
நிக்கலையே ஒரு நாளும்
இதுபோல மனசெல்லாம்
பூக்கலையே

கோபம் காட்டாம
பயத்தை தருவானே இவன்
போற போக்கை பாத்து அட
ஊரே நிக்குது வேர்த்து

பூவா தலையானு
விழுந்தா தெரிஞ்சிக்கலாம்
இவன் முடிவை சொல்ல
யாரும் முடியாதே எப்போதும்

பாசம் ரோஷம்
ரெண்டும் உள்ளாற
வாழுதே பார்வை பேசும்
போதே பயம் கூடுதே

கிடாரியே உன்
போல ஊருக்குள் யாரும்
இல்லை கிடாரியே உன்னால
யாருக்கும் தூக்கம் இல்லை