Thalattu

Thalattu Song Lyrics In English


தாலாட்டு
பிள்ளை உண்டு தாலாட்டு
மணித்தொட்டிலில் முல்லை மெத்தையிட்டு
சிறு மாங்கனிக் கன்னம் முத்தமிட்டு

பாராட்டு
அன்னை என்னை பாராட்டு
உந்தன் பேர் சொல்ல
பிள்ளை பெற்றெடுத்தேன்
அந்த பாக்கியம் செய்து பேரடுத்தேன்

தாலாட்டு

நான் படைத்த தேன் மழலை
நலமுடன் வளர்ந்து வர வேண்டும்
வான் படைத்த முழு நிலவாய்
வாழ்வில் வெளிச்சம் தர வேண்டும்

மான் படைத்த மைவிழியே
இன்னொரு பிள்ளை பெறவேண்டும்
ஒன்றோ ரெண்டோ பிள்ளை
என்றால் இன்பம் கொள்ளை

மெய் சிலிர்த்திட மகன் படிப்பது
மழலை என்ற மந்திரம்
யாழிசையிலும் ஏழிசையிலும்
இல்லை இந்த மோகனம்

தாலாட்டு
பிள்ளை உண்டு தாலாட்டு
உந்தன் பேர் சொல்ல
பிள்ளை பெற்றெடுத்தேன்
அந்த பாக்கியம் செய்து பேரடுத்தேன்


தாலாட்டு

வாழ்க்கையிலே வழக்குகளை
என் மகன் நாளை தீர்த்து வைப்பான்
வருத்தமுரும் மானிடர்க்கு
மருத்துவம் செய்து மகிழ்ந்திருப்பான்

நாம் வளர்த்த கனவுகளை
நனவாய் நிஜமாய் ஆக்கி வைப்பான்

கண்ணன் வண்ணம் கண்டு
துள்ளும் உள்ளம் ரெண்டு

தென் பொதிகையில் நின்றுலவிடும்
தென்றல் போல வந்தவன்
செந்தமிழினில் சிந்திசைக்க
சந்தம் கொண்டு தந்தவன்

பாராட்டு
அன்னை என்னை பாராட்டு
உந்தன் பேர் சொல்ல
பிள்ளை பெற்றெடுத்தேன்
அந்த பாக்கியம் செய்து பேரடுத்தேன்