Thalattu Padi |
---|
தாலாட்டு பாடி தாயாக வேண்டும்
தாளாத என் ஆசை சின்னம்மா
வெகு நாளாக என் ஆசை சின்னம்மா
நாளாக என் ஆசை சின்னம்மா
கண்ணான பிள்ளை இல்லாமல் இங்கே
கண்ணீரில் வந்தாயே சின்னம்மா
கண்ணான பிள்ளை இல்லாமல் இங்கே
கண்ணீரில் வந்தாயே சின்னம்மா
சேயாக நீயும் தாயாக நானும்
சீராட்ட வந்தேனே சின்னம்மா
தாலாட்டு பாடி தாயாக வேண்டும்
தாளாத என் ஆசை சின்னம்மா
வெகு நாளாக என் ஆசை சின்னம்மா
ஆறாது ஆறாது
அழுதாலும் தீராது
ஆனாலும் வழியென்ன தாயே
அறியாத பெண்ணல்ல கனவோடு உறவாடு
சுமைதாங்கிக் கல்லாக நீயே
கடல் அலையேன் உறங்கவில்லை
கடவுளிடம் ஏனோ கருணை இல்லை
தாலாட்டு பாடி தாயாக வேண்டும்
தாளாத என் ஆசை சின்னம்மா
வெகு நாளாக என் ஆசை சின்னம்மா
அன்பான சொந்தங்கள் அபிமான உள்ளங்கள்
எந்நாளும் துணையுண்டு தாயே
அணையாத விளக்கொன்று எப்போதும் உனக்குண்டு
அறியாத உறவுண்டு தாயே
நதியிருந்தால் கரையிருக்கும்
விதியிருந்தால் கண்ணன் துணையிருக்கும்
தாலாட்டு பாடி தாயாக வேண்டும்
தாளாத என் ஆசை சின்னம்மா
வெகு நாளாக என் ஆசை சின்னம்மா