Thamarai Kannangal

Thamarai Kannangal Song Lyrics In English


ஆஆ ஆஆ

ம்ம் ம்ம்ம்ம்

தாமரை
கன்னங்கள் தேன்
மலர் கிண்ணங்கள்

எத்தனை வண்ணங்கள்
முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்

மாலையில்
சந்தித்தேன் மையலில்
சிந்தித்தேன்

மங்கை நான்
கன்னித்தேன் காதலன்
தீண்டும்போது
கைகளை மன்னித்தேன்
கைகளை மன்னித்தேன்
மாலையில் சந்தித்தேன்

கொத்து மலர்
குழல் பாதம் அளந்திடும்
சித்திரமோ

ஆஆ ஆஆ

முத்து நகை
தரும் மெல்லிய
செவ்விதழ் ரத்தினமோ

ஆஆ ஆஆ


துயில் கொண்ட
வேளையிலே குளிர் கண்ட
மேனியிலே துணை வந்து
சேரும்போது சொல்லவோ
இன்பங்கள்

மாலையில்
சந்தித்தேன் மையலில்
சிந்தித்தேன் மங்கை நான்
கன்னித்தேன் காதலன்
தீண்டும்போது கைகளை
மன்னித்தேன்

ஆலிலை
மேலொரு கண்ணனைப்போல்
இவன் வந்தவனோ நூலிடை
மேலொரு நாடகம் ஆடிட
நின்றவனோ

சுமை கொண்ட
பூங்கொடியின் சுவை
கொண்ட தேன் கனியை
உடை கொண்டு மூடும்போது
உறங்குமோ உன்னழகு

தாமரை
கன்னங்கள் தேன்
மலர் கிண்ணங்கள்

எத்தனை வண்ணங்கள்
முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்

ஆஆ மாலையில்
சந்தித்தேன் மையலில்
சிந்தித்தேன்

மங்கை நான்
கன்னித்தேன் காதலன்
தீண்டும்போது
கைகளை மன்னித்தேன்