Thambikku Oru Paattu Sad |
---|
அனைவரும் : தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
எங்கள் நம்பிக்கை வளர்வதற்கு உதவும்
நான் சொல்லும் கதை பாட்டு
இன்று நீ வா இதை கேட்டு
கூடில்லாத குருவிகள் போலே
வீடில்லாமல் அலைகின்றோம்
கூரையில்லாத தெருவோரம்
ஏழைகளாகி வாழ்கின்றோம்
போட்டுக்க சட்டை யார் கொடுப்பா
புதுப் புது பாட்டா யார் படிப்பா
கேட்டதை வாங்கி யார் தருவா
கொஞ்சிப் பேச யார் வருவா
கொஞ்சிப் பேச யார் வருவா
அனைவரும் : தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
எங்கள் நம்பிக்கை வளர்வதற்கு
உதவும் நீ சொன்ன கதை பாட்டு
இன்று நீ வா இதை கேட்டு
எத்தனை தூரம் உன் வீடு
எங்கே இருக்குது நீ கூறு
ஓர் வழியின்றி கிடக்கின்றோம்
உன்னைத் தேடி நடக்கின்றோம்
தேடி பார்த்தும் கிடைக்க வில்லை
திரும்பி போகவும் வழியுமில்லை
நாங்கள் உன்னை மறக்கவில்லை
நீ ஏன் எங்களை நினைக்கவில்லை
அனைவரும் : நீ ஏன் எங்களை நினைக்கவில்லை
அம்மா முகத்தில் சிரிப்பில்லே
அண்ணியின் கண்ணில் ஒளியில்லே
அக்கா உடம்பு சரியில்லே
யாரிடம் சொல்வது புரியல்லே
தாயிருந்தாலும் எங்களுக்கு
தைரியம் சொல்ல முடியல்லே
அனைவரும் : நீயிருந்தால்தான் எல்லாமே
நீ ஏன் இன்னும் வரவில்லே
நீ ஏன் இன்னும் வரவில்லே
அனைவரும் : தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
எங்கள் நம்பிக்கை வளர்வதற்கு உதவும்
நீ சொன்ன கதை பாட்டு
இன்று நீ வா இதைக் கேட்டு
இன்று நீ வா இதைக் கேட்டு
இன்று நீ வா இதைக் கேட்டு