Thanakku Thanakku Endru

Thanakku Thanakku Endru Song Lyrics In English


ஹாஹாஹா தனக்கு தனக்கு என்று ஒதுக்காதே செய்த தர்மம் தலை காக்கும் மறக்காதே தனக்கு மிஞ்சி தான் தானம் என்கின்ற தத்துவம் பொய் அதை மதிக்காதே

ஹாஹாஹா இருக்கு இருக்குதென்று கொடுக்காதே பணம் இல்லாத காலத்தில் தவிக்காதே தனக்கு மிஞ்சிதான் தானம் என்கின்ற தத்துவம் மெய் அதை மறக்காதே

தனக்கு தனக்கு என்று ஒதுக்காதே செய்த தர்மம் தலை காக்கும் மறக்காதே

தன்னலம் இல்லா மனிதரின் நெஞ்சில் கடவுள் இருக்கின்றான் தன்னலம் இல்லா மனிதரின் நெஞ்சில் கடவுள் இருக்கின்றான் நல்ல தர்மம் செய்பவனின் கைகளின் வழியே கர்ணன் சிரிக்கின்றான்

கொடுத்தவன் எல்லாம் சரித்திரத்தோடு சரித்திரம் ஆகின்றான் கொடுத்தவன் எல்லாம் சரித்திரத்தோடு சரித்திரம் ஆகின்றான் அடுத்தவன் எல்லாம் தெருப்புழு போலே கரிப்புகை ஆகின்றான்

இருக்கு இருக்குதென்று கொடுக்காதே பணம் இல்லாத காலத்தில் தவிக்காதே

கஞ்ச கழுதையும் காசு இருந்தால் கர்ணன் ஆகி விடுவான் கஞ்ச கழுதையும் காசு இருந்தால் கர்ணன் ஆகி விடுவான் இந்த கழிசடை உலகில் பணமுடையோர்க்கு கடவுளும் பயப்படுவான்

எந்த காலமும் இருக்கிற வரைதான் ஊருக்கு உபயோகம் எந்த காலமும் இருக்கிற வரைதான் ஊருக்கு உபயோகம் அதை இழந்துவிட்டாலோ கர்ணன் என்றாலும் கிடைப்பது அவமானம்


தனக்கு தனக்கு என்று ஒதுக்காதே செய்த தர்மம் தலை காக்கும் மறக்காதே

அடுத்தவன் மதிக்க கொடுப்பது எல்லாம் கொடையினில் சேராது அடுத்தவன் மதிக்க கொடுப்பது எல்லாம் கொடையினில் சேராது அளந்து கொடுக்கிறவன் இருக்கிற வரைக்கும் தர்மம் வளராது

இருப்பதையெல்லாம் கொடுக்கிற மனிதர்க்கு நிலைக்கிற புகழ் இருக்கும் இருப்பதையெல்லாம் கொடுக்கிற மனிதர்க்கு நிலைக்கிற புகழ் இருக்கும் அதை தடுக்கிற பாவிக்கு கையோடு காலும் விரைத்ததும் பெயர் மறக்கும்

ஆற்றில் போட்டாலும் அளந்து போடென்று பழமொழி இருக்கிறது ஆற்றில் போட்டாலும் அளந்து போடென்று பழமொழி இருக்கிறது அளவுக்கு மீறி கொடுப்பது எல்லாம் விஷமாய் போகிறது

விதைக்கு இல்லாமல் விளைந்ததை எல்லாம் விற்பது உதவாது விதைக்கு இல்லாமல் விளைந்ததை எல்லாம் விற்பது உதவாது விஷயம் தெரிந்தவரின் வார்த்தைகள் மட்டும் எப்பவும் தவறாது

தனக்கு தனக்கு என்று ஒதுக்காதே

இருக்கு இருக்குதென்று கொடுக்காதே பணம் இல்லாத காலத்தில் தவிக்காதே