Thandavam Podhumaiye |
---|
தாண்டவம் போதுமைய்யே
தாண்டவம் போதுமைய்யே
கைலை ஆண்டவனே உன்னை வேண்டுவனே
திருத்தாண்டவம் போதுமய்யே
வீணையில் சாம வேதம் ஓதிய
வேந்தன் அழும்போது
வீணையில் சாம வேதம் ஓதிய
வேந்தன் அழும்போது
நெற்றி வெந்நீர் அணிந்தவன்
கண்ணீர் வடித்தும் வாசல் வரும்போது
தாண்டவம் போதுமைய்யே
கைலை ஆண்டவனே உன்னை வேண்டுவனே
திருத்தாண்டவம் போதுமய்யே
செஞ்சோற்று கடன் தீர்க்க ஒரு தம்பியும்
காள முகில் போல கர்ஜித்த ஒரு பிள்ளையும்
செஞ்சோற்று கடன் தீர்க்க ஒரு தம்பியும்
காள முகில் போல கர்ஜித்த ஒரு பிள்ளையும்
தெருக்காட்டில் போராடி சாய்ந்ததேன்
என்றும் சாயாத குன்றங்கள் நிலை சாய்ந்ததேன்
இவை வினை என்பதா இல்லை விதி என்பதா
நித்தம் சதிராடும் சிவனே உன் செயல் என்பதா
தாண்டவம் போதுமைய்யே
கைலை ஆண்டவனே உன்னை வேண்டுவனே
திருத்தாண்டவம் போதுமய்யே
நான் பெற்ற மகள் வாழ நலம் பாடினேன்
அவள் நினைவாக நாள்தோறும் உயிர் வாடினேன்
நான் பெற்ற மகள் வாழ நலம் பாடினேன்
அவள் நினைவாக நாள்தோறும் உயிர் வாடினேன்
குற்றங்கள் வேறென்ன நான் செய்தது
எந்தன் சுற்றங்கள் எனை விட்டு ஏன் போனது
குற்றங்கள் வேறென்ன நான் செய்தது
எந்தன் சுற்றங்கள் எனை விட்டு ஏன் போனது
நான் தனியாவதா நெஞ்சம் தணலாவதா
என்றும் கலங்காத இலங்கேசன் அலை பாய்வதா
தாண்டவம் போதுமைய்யே
கைலை ஆண்டவனே உன்னை வேண்டுவனே
திருத்தாண்டவம் போதுமய்யே