Thaneerilay Mugam |
---|
ஹோ ஓஒ ஒ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஒ ஹோ ஓஒ
லுலுலுலு லுலுலுலு
தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே
இன்னார்க்கு இன்னார்தான் சாமி சொன்னதம்மா
கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா
இனி உன்னை விட்டு நான் வாழ ஆகாதம்மா
தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே
உன்னிடத்தில் இத்தனை நாள்
உண்மை ஒன்றை மறைத்ததுண்டு
சின்னஞ்சிறு வயது முதல்
எனக்கொரு மனைவி உண்டு
கோபம் கொள்ள வேண்டாம் அம்மா ஹோய்
தாங்கிக் கொள்ள வேண்டும் அம்மா
நல்லவன் என்று உன்னையே நினைத்தேனே
உண்மை அறிந்து துடித்தேன் நான் தானே
போட்டதென்ன வேஷம் இனி போதும் போதும் மோசம்
நான் சொன்ன சம்சாரம் எந்தன் சங்கீதம்
இதைக் கண்டு கொள்ள முடியாமல் ஆர்பாட்டமா
தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே
இன்னார்க்கு இன்னார்தான் சாமி சொன்னதம்மா
கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா
இனி உன்னை விட்டு நான் வாழ ஆகாதம்மா
தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே
நெஞ்சை அள்ளும் பாடலிலே
என்னை அள்ளிக் கொடுத்து விட்டேன்
நல்ல இசைத் தேடலிலே
வேறெதையும் மறந்து விட்டேன்
என்னுடைய சங்கீதம் நீ ஹோ ஹோ
உன்னுடைய சாரீரம் நான்
ஒன்றை ஒன்று தான் இனி மேல் பிரியாது
அள்ள அள்ளத்தான் அமுதம் குறையாது
தெள்ளு தமிழ் பள்ளு உன் கண்ணில் உள்ள கள்ளு
எந்நாளும் உன் நாதம் என்னை நீங்காது
இனி காலம் தோறும் ஓயாது ஆலாபனம்
தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே
இன்னார்க்கு இன்னார்தான் சாமி சொன்னதம்மா
கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா
இனி உன்னை விட்டு நான் வாழ ஆகாதம்மா
தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே