Thangame Unna Thaalatta |
---|
தங்கமே உன்ன
தாலாட்ட நா இருக்கேன்
வைரமே உன்ன சீராட்ட
நா இருப்பேன்
அன்னைக்கு
பதில் நா தானே
என்னைக்கும் உயிர்
நீதானே அப்பனா மாறுவேன்
இனிமேலு என்னோட
வேர்வைதான் தாய்ப்பாலு
தங்கமே உன்ன
தாலாட்ட நா இருக்கேன்
வைரமே உன்ன சீராட்ட
நா இருப்பேன்
காற்றில் கலந்து
வரும் மூச்சாவேன்
உந்தன் காத்தில்
தாய்ப்படிக்கும்
பாட்டாவேன்
பத்து மாதம்
வாழும் வரையில்
உன்ன தாயின் மடியில்
சுமந்தாள் இந்த மண்ணில்
வாழும் வரையில் எந்தன்
நெஞ்சில் நானும் சுமப்பேன்
தொப்புள் கொடி
மீதிலே வந்தா மறுத்தாயடி
உந்தன் நிழல்தானே எல்லை
என்பேன் என் உயிர் தனியாக
இல்லை என்பேன்
தங்கமே உன்ன
தாலாட்ட நா இருக்கேன்
வைரமே உன்ன சீராட்ட
நா இருப்பேன்
அன்னைக்கு
பதில் நா தானே
என்னைக்கும் உயிர்
நீதானே அப்பனா மாறுவேன்
இனிமேலு என்னோட
வேர்வைதான் தாய்ப்பாலு