Thanimai En Thunai |
---|
தனிமை என் துணை அதை தந்தான் இறைவனே தனிமை என் துணை அதை தந்தான் இறைவனே
வசந்தக் காலம் மலர்ந்த போதும் நான் கண்டதில்லையே தனிமை என் துணை என்றும் தனிமை என் துணை
தனிமை என் துணை அதை தந்தான் இறைவனே
வசந்தக் காலம் மலர்ந்த போதும் நான் கண்டதில்லையே தனிமை என் துணை என்றும் தனிமை என் துணை
விளை நிலம் ஒன்று வேலிக்குள் இன்று பலனின்றி போகும் நிலை இனியேன் உறவெனும் கூண்டில் தனிமையில் வாடும் பறவையின் உள்ளம் தவிக்கையிலே
கண் மூடி தூங்கும் என் போல யாரும் இங்கில்லை பூமியெங்கும் தனிமை என் துணை என்றும் தனிமை என் துணை
தனிமை என் துணை அதை தந்தான் இறைவனே
வசந்தக் காலம் மலர்ந்த போதும் நான் கண்டதில்லையே தனிமை என் துணை என்றும் தனிமை என் துணை
கடலுக்குள் ஓடும் நதிகளின் ஓட்டம் கரையினில் பார்த்தால் தெரிந்திடுமா இதயத்தில் ஆடும் ஏக்கத்தின் வாட்டம் எழுத்தினில் கூற முடிந்திடுமா
எந்நாளும் பெண்மை என்கின்ற தெய்வம் கொள்ளாத துன்பம் இல்லை தனிமை என் துணை என்றும் தனிமை என் துணை
தனிமை என் துணை அதை தந்தான் இறைவனே
வசந்தக் காலம் மலர்ந்த போதும் நான் கண்டதில்லையே தனிமை என் துணை என்றும் தனிமை என் துணை