Thannandhaniye |
---|
தன்னந்தனி என்றிருந்தேன்
தாவி வந்த வெண்ணிலவே
பின்னிப் பின்னி கட்டிக் கொண்ட
பிஞ்சு இளம் பிறை நிலவே
அன்பின் அணைப்பில்
சொல்ல வார்த்தையும் இல்லாமல்
நான் வாடியே நின்றேனே
உந்தன் முகம் பார்த்தே
என் உள்ளம் தெளிந்தேனே
நீர் வரண்ட ஆறு என
நின்றிருந்த என் வாழ்வில்
கங்கை என வந்தவளே
கண்ணில் நீரை தந்தவளே
உந்தன் எதிர் காலம் தானே
எந்தனுக்காதாரம்
இனி வந்திடும் முன்னேற்றம்
இனி வந்திடும் முன்னேற்றம்
தன்னந்தனி என்றிருந்தேன்
தாவி வந்த வெண்ணிலவே
அன்பின் அணைப்பில்
சொல்ல வார்த்தையும் இல்லாமல்
நான் வாடியே நின்றேனே
அல்லி மகராணியை உனக்கு
ஏவலுக்கென்று வைப்பேனே
ஆரவல்லி சூரவல்லி
காவல் வைத்து பார்ப்பேனே
ஊர்வசியும் மேனகையும்
சேர்ந்து உந்தன் தோழிகளாய்
உன்னுடைய ஊர்வலத்தில்
முன்னால் வரக் காண்பேனே
நட்சத்திர பூக்களினை
ஆகாயமும் உன் மேலே
நாள் தோறும் தூவி இசை
பாடுவதை நான் கேட்பேன்
இனி இது தானே எனது அன்பின்
சாட்சியமாகுமம்மா
இது நிச்சயம் நிச்சயமா
இது நிச்சயம் நிச்சயமா
தன்னந்தனி என்றிருந்தேன்
தாவி வந்த வெண்ணிலவே
அன்பின் அணைப்பில்
சொல்ல வார்த்தையும் இல்லாமல்
நான் வாடியே நின்றேனே
வைர மணித் தேரில் உன்னை
காணும் ஆசை கொண்டேனே
வான வில்லில் தேரணங்கள்
வாசல் தன்னில் வைப்பேனே
சின்ன மகராணிக்கொரு
தங்க வண்ண பல்லாக்கு
சிந்து நதி போலே இங்கு
பாடும் உந்தன் மேலாக்கு
வெற்றுக் கையில் என்ன முழம்
என்று என்னை கேட்காதே
எப்படியும் என் கனவை
உண்மை எனப் பார்ப்பாயே
இனி அது தானே எந்தன் வாழ்வின்
லட்சியம் ஆகுமம்மா
இது சத்திய வார்த்தையம்மா
இது சத்திய வார்த்தையம்மா
தன்னந்தனி என்றிருந்தேன்
தாவி வந்த வெண்ணிலவே
அன்பின் அணைப்பில்
சொல்ல வார்த்தையும் இல்லாமல்
நான் வாடியே நின்றேனே