Tharaimael Aadum Mazhai Megam |
---|
ஆஅஆஅஆ
தரைமேல் ஆடும் மழை மேகம்
தாளாமல் வாடும் பூப்போல் தேகம்
தனிமை ராகம் படிக்கிறது
தொட்டால் போதும் உன்னை விடாது
மாமா மாமா ஏன் பாத்தே
அட மாமா மாமா ஏன் பாத்தே
மடியில் சொர்க்கத்தை நான் பார்த்தேன்
பாத்தத வெளியே சொல்லாதே
பார்வையினால் என்னைக் கொல்லாதே
மச்சான் மச்சான் ஏன் பாத்தே
ஆணா பெண்ணான்னு நான் பாத்தேன்
பெண்ணாக என்ன படைச்சானே
கண்ணோடு விஷத்த கலந்தானே
மாமா மாமா ஏன் பாத்தே
மடியில் சொர்க்கத்தை நான் பார்த்தேன்
மச்சான் மச்சான் ஏன் பாத்தே
ஆணா பெண்ணான்னு நான் பாத்தேன்
பொல்லாத கண்ணுக்கு விஷமாகும்
பொன்னான நெஞ்சுக்கு விருந்தாகும்
பொல்லாத கண்ணுக்கு விஷமாகும்
பொன்னான நெஞ்சுக்கு விருந்தாகும்
உல்லாச தேனை நீ குடிச்சாலே
உண்டான நோய்க்கிது மருந்தாகும்
வண்டுகள் போகும் மலர் தேடி
வசந்த காலத்தில் இசை பாடி
அடிச்சது யோகம் ராஜா தான்
வண்டினை தேடுது ரோஜா தான்
சரிதான் போட மடையன்தாண்டா
கள்ளை பால் போல குடிப்பாண்டா
மாமா மாமா ஏன் பாத்தே
மடியில் சொர்க்கத்தை நான் பார்த்தேன்
பாத்தத வெளியே சொல்லாதே
பார்வையினால் என்னைக் கொல்லாதே
மாமா மாமா ஏன் பாத்தே
மடியில் சொர்க்கத்தை நான் பார்த்தேன்
வானத்தில் இருந்து தேவதைப்போலே
வந்தாயடி நீ பூமியின் மேலே
வானத்தில் இருந்து தேவதைப்போலே
வந்தாயடி நீ பூமியின் மேலே
நித்தம் நித்தம் வாடி என் பூங்கொடியே
நான் ஆடத்தானே உன் மடியே
ஆகாதடி இந்த விளையாட்டு
நீ பாரடி என்னை எடை போட்டு
அழகை ரசிப்பவன் மடையனடி
அன்புக்குத்தான் நான் அடிமையடி
அழகை மயக்கி ஆண்டும் உலகில்
அதிசய மனிதனும் நீதான்யா
மச்சான் மச்சான் ஏன் பாத்தே
ஆணா பெண்ணான்னு நான் பாத்தேன்
பெண்ணாக என்ன படைச்சானே
கண்ணோடு விஷத்த கலந்தானே
மச்சான் மச்சான் ஏன் பாத்தே
ஆணா பெண்ணான்னு நான் பாத்தேன்
இருவர் : லாலாலலலலலலலலாலா