Tharaimel Pirakka

Tharaimel Pirakka Song Lyrics In English


உலகத்தின்
தூக்கம் கலையாதோ
உள்ளத்தின் ஏக்கம்
தொலையாதோ
உழைப்பவர் வாழ்க்கை
மலராதோ ஒரு நாள்
பொழுதும் புலராதோ

தரை மேல்
பிறக்க வைத்தான்
எங்களைத்தண்ணீரில்
பிழைக்க வைத்தான்

கரை மேல்
இருக்க வைத்தான்
பெண்களைக்கண்ணீரில்
குளிக்க வைத்தான்

தரை மேல்
பிறக்க வைத்தான்

கட்டிய மனைவி
தொட்டில் பிள்ளை உறவைக்
கொடுத்தவர் அங்கே

அலை கடல்
மேலே அலையாய்
அலைந்து உயிரைக்
கொடுப்பவர் இங்கே

வெள்ளி நிலாவே
விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு

முடிந்தால்
முடியும் தொடர்ந்தால்
தொடரும்
இதுதான் எங்கள்
வாழ்க்கை

தரை மேல்
பிறக்க வைத்தான்
எங்களைத்தண்ணீரில்
பிழைக்க வைத்தான்

கரை மேல்
இருக்க வைத்தான்
பெண்களைக்கண்ணீரில்
குளிக்க வைத்தான்


கடல் நீர் நடுவே
பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ

தனியாய்
வந்தோர் துணிவைத்
தவிர துணையாய்
வருபவர் யாரோ

ஒருநாள்
போவார் ஒருநாள்
வருவார் ஒவ்வொரு
நாளும் துயரம்

ஒரு ஜாண்
வயிறை வளர்ப்பவர்
உயிரை ஊரார் நினைப்பது
சுலபம் ஊரார் நினைப்பது
சுலபம்

தரை மேல்
பிறக்க வைத்தான்
எங்களைத்தண்ணீரில்
பிழைக்க வைத்தான்

கரை மேல்
இருக்க வைத்தான்
பெண்களைக்கண்ணீரில்
குளிக்க வைத்தான்

தரை மேல்
பிறக்க வைத்தான்