Tharamai Ezhuda |
---|
தரமாய் எழுடா நீ தமிழின் புதல்வா திறமாய் எழுடா நீ அறத்தின் முதல்வா
தரமாய் எழுடா நீ தமிழின் புதல்வா திறமாய் எழுடா நீ அகத்தின் முதல்வா
தெர் தெர் தெர் என தெறிக்கும் வீரா சர சர சர என பறக்கும் சூரா
ஹோ ஓ ஓ
நாளை நமது நாடும் நமது கேடு செய்தால் ரணம் ரணம் ரணம்
தேசம் தாயின் தீரம் சிதைக்க வேட்டு வைத்தால் ரணம் ரணம் ரணமடா
ஜன கண மனடா என் தாய் மடிடா ஜன கண மனடா
சிந்திய ரத்தம் சுதந்திர சரித்திரம் சீண்ட வந்தால் உனக்கது தரித்திரம்
இந்தியன் என்றால் இதயமும் துடித்திடும் அந்தியன் வந்தால் போர்க்குணம் முளைத்திடும்
பின் நின்று தாக்கும் நரிகளின் வேரை முன் நின்று தகர்ப்போம் இது சூளுரை
என்றென்றும் காப்போம் எங்களின் வேரை கண்கொண்டு காண்போம் வெற்றிப் பூமழை
தாயின் கண்ணில் வீரத்தை கற்றோமமே தாயின் விரல் பிடியில் தாய்மையை பெற்றோமே
தரமாய் எழுடாநீ தரமாய் எழுடா நீ தமிழின் புதல்வா திறமாய் எழுடா நீ அகத்தின் முதல்வா
தெர் தெர் தெர் என தெறிக்கும் வீரா சர சர சர என பறக்கும் சூரா
ஜன கண மனடா என் தாய் மடிடா ஜன கண மனடா
ஜன கண மனடா என் தாய் மடிடா ஜன கண மனடா