The Karma Theme |
---|
திசை திரும்பி நாளும்
கடல் மலை கடந்து போனாலும்
மனம் திருந்தி நாளும்
வழி ரணம் மறந்து போனாலும்
சகா
காலம் தூரம் எங்கே சென்றாலும்
சகா
வினை உன்னை தொடும்
உன் சிரிப்புக்கு விதை
நீதான்
உன் கண்ணீருக்கும் ஒரே வினை
நீதான்
அம்பு விட்ட வேடன் நீதான்
அம்பை தாங்க போகும் நெஞ்சம்
நீதான்
மனம் திருந்தி நாளும்
கனா கலைந்த போதும்
ஏதோ வினா என்னை பந்தாடும்
எவன் வரைந்த மாயம்
இவள் இவன் வெறும் அத்யாயம்
சகா
வேகம் ஓடும் காலம் தீராத
சகா
எல்லை இல்லாததா
தேடி செல்லும் கண்கள்
நீதான்
கண்ணில் காணும் பிம்பம் ஏதும்
நீதான்
பிம்பம் காட்டும் பாதை
நீதான்
பாதை சென்று சேரும் இடம்
நீதான்
எவன் வரைந்த மாயம்
நீயே விதை
நீயே மழை
மரம் நீ
நீயே கிளை
நீயே கனி மறுபடி
நீயே விதை
நீயே மழை
மரம் நீ
நீயே கிளை
நீயே கனி மறுபடி
சகா
காலம் தூரம் எங்கே சென்றாலும்
சகா
வினை உன்னை தொடும்
மனம் திருந்தி நாளும்