Thedivarum Kanngalukkul

Thedivarum Kanngalukkul Song Lyrics In English


தேடுகின்ற கண்களுக்குள்
ஓடிவரும் சுவாமி
திருவிளக்கின் ஒளியினிலே
குடியிருக்கும் சுவாமி

வாடுகின்ற ஏழைகளின்
வறுமை தீர்க்கும் சுவாமி
வஞ்சமில்லா நல்லவர்க்கு
அருள் புரியும் சுவாமி
ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி

கண்ணனும் நீ கணபதி நீ
கந்தனும் நீயே
எங்கள் காவல் தெய்வம் பரமசிவன்
விஷ்ணுவும் நீயே

அண்டமெல்லாம் காத்தருளும்
சக்தியும் நீயே
என்மேல் அன்பு வைத்து
நதி வரைக்கும் ஓடிவந்தாயே
ஐயப்பா சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி

தேடுகின்ற கண்களுக்குள்
ஓடிவரும் சுவாமி
திருவிளக்கின் ஒளியினிலே
குடியிருக்கும் சுவாமி
ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி

தந்தையுண்டு அன்னையுண்டு
எந்தன் மனையிலே
ஒரு தம்பி மட்டும் பிறக்க வேண்டும்
உந்தன் வடிவிலே


அன்பு கொண்டு தந்தைக்கவன்
செய்யும் பணியிலே
நாங்கள் ஆண்டு தோறும்
வந்து நிற்போம் உந்தன் நிழலிலே
ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி

தேடுகின்ற கண்களுக்குள்
ஓடிவரும் சுவாமி
திருவிளக்கின் ஒளியினிலே
குடியிருக்கும் சுவாமி

வாடுகின்ற ஏழைகளின்
வறுமை தீர்க்கும் சுவாமி
வஞ்சமில்லா நல்லவர்க்கு
அருள் புரியும் சுவாமி
ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி

ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி