Theendai Mei Theendai

Theendai Mei Theendai Song Lyrics In English


கன்றும்
உண்ணாது கலத்தினும்
படாது நல்லான் தீம்பால்
நிலத்து உக்காங்கு எனக்கும்
ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திவ்வலை அல்குல் என்
மாமைக் கவினே

தீண்டாய் மெய்
தீண்டாய் தாண்டாய்
படி தாண்டாய் தீண்டாய்
மெய் தீண்டாய் தாண்டாய்
படி தாண்டாய் தீண்டாய்
மெய் தீண்டாய் தாண்டாய்
படி தாண்டாய்

தீண்டாய் மெய்
தீண்டாய் தாண்டாய் படி
தாண்டாய் ஒரு விரல் வந்து
என்னைத் தீண்டியதே என்
நரம்போடு வீணை மீட்டியதே
மனம் அவன்தானா இவன்
என்று திடுக்கிட்டதே

தீண்டாய் மெய்
தீண்டாய் தாண்டாய் படி
தாண்டாய் ஒரு விரல்
வந்து உன்னைத் தீண்டியதோ
உன் நரம்போடு வீணை
மீட்டியதோ உன் உயிர்க்குள்ளே
காதல் அம்பைத் தொடுத்திட்டதோ

வானில் பிறந்த
அமுதன்றோ பாவை
விளைந்த மழை அன்றோ
முல்லை வகுலம் குருக்கத்தி
தொல்லையின் இடைந்த உடல்
அன்றோ தீண்டாய் மெய் தீண்டாய்

விழியோடும்
தீண்டல் உண்டு
விரலோடும் தீண்டல்
உண்டு இரண்டோடும்
பேதம் உள்ளது

விழித்தீண்டல்
உயிர் கிள்ளும் விரல்
தீண்டல் உள்ளம் கிள்ளும்
அதுதானே நீ சொல்வது

நதியோரப்
பூவின்மேலே ஜதி
பாடும் சாரல் போலே
என்னில் இன்ப துன்பம்
செய்குவதோ

ஒரு கன்னம்
தந்தேன் முன்னே மறு
கன்னம் தந்தாய் பெண்ணே
ஏசுநாதர் காற்று வந்து
வீசியதோ

உறவின்
உயிரே உயிரே
என்னைப் பெண்ணாய்ச்
செய்க
அழகே அழகே
உன் ஆசை வெல்க

தீண்டாய் மெய்
தீண்டாய் தாண்டாய் படி
தாண்டாய் ஒரு விரல் வந்து
என்னைத் தீண்டியதே என்
நரம்போடு வீணை மீட்டியதே
மனம் அவன்தானா இவன்
என்று திடுக்கிட்டதே


கடலோடு முத்தம்
தந்தும் கலையாத வானம்
போல உடலோடு
ஒட்டிக்கொள்ளவோ

உடலோடு
அங்கும் இங்கும்
உறைகின்ற ஜீவன்
போல உன்னோடு
கட்டிக்கொள்ளவோ

உனைத் தேடி
மண்ணில் வந்தேன்
எனைத்தேடி நீயும்
வந்தாய் உன்னை நானும்
என்னை நீயும் கண்டு
கொண்டோம்

பல பேர்கள்
காதல் செய்து பழங்காதல்
தீரும்போது பூமி வாழப் புதிய
காதல் கொண்டுவந்தோம்

பனியோ
பனியின் துளியோ
உன் இதழ்மேல் என்ன
பனியோ தேனோ
நீ சுவைத்தால் என்ன

தீண்டாய்
தீண்டாய்
மெய் தீண்டாய்
மெய் தீண்டாய்

தாண்டாய்
தாண்டாய்
படி தாண்டாய்
படி தாண்டாய்

ஒரு விரல்
வந்து உன்னைத்
தீண்டியதோ
ஒரு விரல்
வந்து என்னைத்
தீண்டியதே
உன் நரம்போடு
வீணை மீட்டியதோ
என் நரம்போடு
வீணை மீட்டியதே
உன் உயிர்க்குள்ளே
மனம் அவன்தானா
காதல் அம்பைத்
தொடுத்திட்டதோ
இவன்
என்று திடுக்கிட்டதே

தீண்டாய் மெய்
தீண்டாய் தாண்டாய் படி
தாண்டாய்
வானில் பிறந்த
அமுதன்றோ
தீண்டாய் மெய்
தீண்டாய் தாண்டாய் படி
தாண்டாய்
பாவை விளைந்த
மழை அன்றோ
தீண்டாய் மெய்
தீண்டாய் தாண்டாய் படி
தாண்டாய் படி தாண்டாய்
படி தாண்டாய் படி
தாண்டாய் படி தாண்டாய்