Then Podhigai Kaatre |
---|
ஆரிஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆரிஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆராரிராரோ ஆராரிராரோ
தென் பொதிகை காற்றே
தென் மதுரை பாட்டே
கண்ணாமூச்சி ஆடும்
பட்டாம்பூச்சி பூவே
அம்மா எனும் வாக்கியம்
அது சும்மா வந்து சேருமா
பிள்ளை பெரும் புண்ணியம்
அது இல்லை எனில் இன்பமா
கண்மணி கண்மணி மீது
இரு மின்மினி மின்மினி ஏது
தென் பொதிகை காற்றே
தென் மதுரை பாட்டே
சிறு வாழை தண்டு ரெண்டு
சிணுங்கி வரும் கால்களில்
செவ்வந்தி மாலை ரெண்டு
சாய்ந்து வரும் தோள்களில்
தாய்மை என்பது
அது போல வரமும் ஏதடா
உன்னை சுமப்பது
அது போல சுகமும் ஏதடா
இளங்காற்றின் இன்பமே
இனி ஏது துன்பமே
தென் பொதிகை காற்றே
தென் மதுரை பாட்டே
கண்ணாமூச்சி ஆடும்
பட்டாம்பூச்சி பூவே
அம்மா எனும் வாக்கியம்
அது சும்மா வந்து சேருமா
பிள்ளை பெரும் புண்ணியம்
அது இல்லை எனில் இன்பமா
கண்மணி கண்மணி மீது
இரு மின்மினி மின்மினி ஏது
தென் பொதிகை காற்றே
தென் மதுரை பாட்டே
கண்ணாமூச்சி ஆடும்
பட்டாம்பூச்சி பூவே