Then Sinthum Malarallavo

Then Sinthum Malarallavo Song Lyrics In English


பாடகர்கள் : எஸ் பி பாலசுப்பிரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

ராரரரரரராரா ராராராரரரராரா ராரரரரரராரா ராராராரரரராரா

தேன் சிந்தும் மலரல்லவோ வான் நீந்தும் நிலவல்லவோ அழகே நீ வா அமுதே நீ வா அருகே நீ வா வா

நீ தந்த சுகமல்லவோ நான் கண்ட கனவல்லவோ உயிரே நீ வா உறவாட வா ஒரு கோடி தாஆஆஆ

கனி ஒன்று நீ ஓடிவா சுவை தந்து நீ கூட வா மலராத முல்லை நீ மலர்கின்ற வேளை இதழோடு இதழாக வா

தேன் சிந்தும் மலரல்லவோ வான் நீந்தும் நிலவல்லவோ அழகே நீ வா அமுதே நீ வா அருகே நீ வா வா


மலர் மேடை நான் போடவா இளம் காதல் சுகம் தேடவா நீ காணும் ராணி தேன் பாயும் தேனீ உடலோடு உயிராக வா

நீ தந்த சுகமல்லவோ நான் கண்ட கனவல்லவோ உயிரே நீ வா உறவாட வா ஒரு கோடி தாஆஆஆ



இடையோடு இடையாக வா இனியென்ன தடை இங்கு வா நாம் காணும் இன்பம் நிலையான சொர்க்கம் நீயின்றி நானில்லை வா

தேன் சிந்தும் மலரல்லவோ வான் நீந்தும் நிலவல்லவோ அழகே நீ வா அமுதே நீ வா அருகே நீ வா வா