Thendral Oru Paattu |
---|
தென்றல் ஒரு பாட்டு கட்டும் வண்டு வந்து மெட்டு கட்டும் தென்றல் ஒரு பாட்டு கட்டும் வண்டு வந்து மெட்டு கட்டும்
ஓடையெல்லாம் தாளம் சொல்லும் அதைக் கேட்டுக்கிட்டே காலம் செல்லும் ஓடையெல்லாம் தாளம் சொல்லும் அதைக் கேட்டுக்கிட்டே காலம் செல்லும்
தென்றல் ஒரு பாட்டு கட்டும் வண்டு வந்து மெட்டு கட்டும்
பாட்டு மறந்ததின்னு பாவி மனம் துடிக்கிறது தூரத்து குயில் வந்து சொல்லிக் கொடுக்கிறது மேகம் இறங்கி வந்து ராகம் படிக்கிறது ஆளான பூவெல்லாம் பேரச் சொல்லிக் கூப்பிடுது
சங்கீதம் இருக்கையிலே சாப்பாடு தேவையில்லை சங்கீதம் இருக்கையிலே சாப்பாடு தேவையில்லை தூங்கையிலும் பாட்டு வரும் நான் ஒண்ணும் ஊமையில்லை
தென்றல் ஒரு பாட்டு கட்டும் வண்டு வந்து மெட்டு கட்டும் ஓடையெல்லாம் தாளம் சொல்லும் அதைக் கேட்டுக்கிட்டே காலம் செல்லும்
தென்றல் ஒரு பாட்டு கட்டும் வண்டு வந்து மெட்டு கட்டும்
ஏரிக்கரையில் எல்லாம் எம் பாட்டு கேட்குதம்மா நான் போகும் பாதையெல்லாம் மான் கூட்டம் வருகுதம்மா ஏதோ ஒரு கனவு என் நெஞ்சில் இருக்குதம்மா கண்டு வரும் கனவெல்லாம் நாளை பலிக்குமம்மா
சித்திரையில் வெயிலடிச்சா கார்த்திகையில் மழையும் வரும் சித்திரையில் வெயிலடிச்சா கார்த்திகையில் மழையும் வரும் எழுத்துக்கு வேளை வரும் கழுத்துக்கு மாலை வரும்
தென்றல் ஒரு பாட்டு கட்டும் வண்டு வந்து மெட்டு கட்டும் ஓடையெல்லாம் தாளம் சொல்லும் அதைக் கேட்டுக்கிட்டே காலம் செல்லும் அதைக் கேட்டுக்கிட்டே காலம் செல்லும் அதைக் கேட்டுக்கிட்டே காலம் செல்லும்