Thendrale Thendrale Thedinen |
---|
பாடலாசிரியர் : வைரமுத்து
தென்றலே தென்றலே தேடினேன் வா வாலிபம் வந்ததும் வாடினேன் வா
தென்றலே தென்றலே தேடினேன் வா வாலிபம் வந்ததும் வாடினேன் வா
உன் கண்ணுக்குள்ளே ஏனிந்த வெப்பங்கள் என் நெஞ்சுக்குள் பூ அள்ளி கொட்டுங்கள் பாபப்பா பாபப்பா
தென்றலே தென்றலே தேடினேன் வா வாலிபம் வந்ததும் வாடினேன் வா
ஏனோ பருவம் வந்தது உனை யார் பழகச் சொன்னது ஆஹா பறவை வந்தது மரமா கடிதம் போட்டது பெண்மை வயசு வந்தது துணையாய் வருக என்றது ஆஹா நதியும் வந்தது கடலா கண்ணடித்தது
உனையே நினைத்தேன் உயிரை வெறுத்தேன் நதியாய் இணைந்தேன் நகமும் கறுத்தேன் நதியே உனக்கும் நடுக்கம் ஏனோ
தென்றலே தென்றலே தேடினேன் வா வாலிபம் வந்ததும் வாடினேன் வா உன் கண்ணுக்குள்ளே ஏனிந்த வெப்பங்கள் ஆஹாஹா என் நெஞ்சுக்குள் பூ அள்ளி கொட்டுங்கள் பாபப்பா பாபப்பா
தென்றலே தென்றலே தேடினேன் வா வாலிபம் வந்ததும் வாடினேன் வா
ஆஹா புதிய வெள்ளமே வா வா அணை உடைக்க வா நீயோ அழகு ராஜ்ஜியம் நானும் படை எடுக்கவா வா வா காமன் தம்பியே நீயும் களிதுவக்குவாய் ஆசை மனது போலவே நானும் மடை திறக்கவா
இளமை மயக்கம் இதமாய் இருக்கும் இருக்கும் வரைக்கும் இதயம் சுரக்கும் உயிரை கசக்கும் நெருக்கம் இன்பம்
தென்றலே தென்றலே தேடினேன் வா வாலிபம் வந்ததும் வாடினேன் வா தென்றலே தென்றலே தேடினேன் வா வாலிபம் வந்ததும் வாடினேன் வா
உன் கண்ணுக்குள்ளே ஏனிந்த வெப்பங்கள் என் நெஞ்சுக்குள் பூ அள்ளி கொட்டுங்கள் இருவர் : பாபப்பா பாபப்பா
தென்றலே தென்றலே தேடினேன் வா வாலிபம் வந்ததும் வாடினேன் வா