Thendralukku Endru |
---|
தென்றலுக்கு என்றும் வயது
பதினாறே அன்றோ
செவ்வானத்தில் வண்ண நிலாவும்
சின்னவள்தான் அன்றோ
தென்றலுக்கு என்றும் வயது
பதினாறே அன்றோ
செவ்வானத்தில் வண்ண நிலாவும்
சின்னவள்தான் அன்றோ
தென்றலுக்கு என்றும் வயது
பதினாறே அன்றோ
வெள்ளித்தேரில் உள்ள சிலைக்கு
எந்நாள் திருநாளோ
மின்னல் மேனி மேகக் குழலால்
தன்னை அறிவாளோ
பால் வண்ணம் பூ முல்லை
பார்த்தால் போதாதோ
பாலைவனத்தில் காவிரியாறு
பைரவி பாடாதோ
தென்றலுக்கு என்றும் வயது
பதினாறே அன்றோ
செவ்வானத்தில் வண்ண நிலாவும்
சின்னவள்தான் அன்றோ
தென்றலுக்கு என்றும் வயது
பதினாறே அன்றோ
கம்பன் வந்தால் காவியம் பாட
கற்பனை ஒரு கோடி
கண்ணன் கண்ட ராதை கூட ஈடில்லடி
தத்தித் தாவும் சித்திர முத்து
சிப்பியில் விளையாடி
தழுவப்போகும் தலைவன் யாரோ
காதல் உறவாடி
தென்றலுக்கு என்றும் வயது
பதினாறே அன்றோ
பட்டுச்சேலை கட்டும் சோலை
வாடுது கண் பட்டு
பன்னீர் சொம்பும் முன்னால் நின்று
வாவென்றது
எத்தனை சொல்லி இத்தனை அழகை
நான் பாடுவேன்
இன்பத் தமிழில் உள்ளதையெல்லாம்
அள்ளித் தருகின்றேன்
தென்றலுக்கு என்றும் வயது
பதினாறே அன்றோ
செவ்வானத்தில் வண்ண நிலாவும்
சின்னவள்தான் அன்றோ
தென்றலுக்கு என்றும் வயது
பதினாறே அன்றோ