Thenmalli Poove |
---|
தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே
என் கண்ணே என் ராணி நீயின்றி நானில்லையே
தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே
என் கண்ணா என் மன்னா நீயின்றி நானில்லையே
தேன்மல்லி பூவே
முத்தாரம் மார் மீது தவழ்கின்றது
எனக்கதில் கொஞ்சம் இடமும் கொடு
தேர் உண்டு நீ உண்டு திருநாள் உண்டு
திருமகள் நெஞ்சில் துயில் கொள்ளவா
உலகமெல்லாம் ஒரு நிலவு
இதயமெல்லாம் ஒரு நினைவு
என் வாழ்வின் ஆனந்தம் நீயே
தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே
என் கண்ணா என் மன்னா நீயின்றி நானில்லையே
தேன்மல்லி பூவே
செவ்வாழை பொன்மேனி துடிக்கின்றது
சிறு தொட்டில் தந்து உறங்க விடு
தித்திக்கும் செவ்வாயும் நனைகின்றது
சிறு முத்தம் தந்து மயங்கவிடு
மலர்களிலே அணை அமைப்போம்
மன்மதனை துணைக்கழைப்போம்
இரவேது பகலேது கண்ணே
தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே
என் கண்ணே என் ராணி
நீயின்றி நானில்லையே
தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே
தேன்மல்லி பூவே
ஆஆஆம்ம்ம்ம்ம்ம்
ஆஆஆ