Thenthoongum |
---|
ஆஆஆஆஅஆஆஅ
ஆஅஆஅஆஅ
தேன் தூங்கும் பூவே
வாடாமல் வாழ்க
பால் வெண்ணிலாவே தேயாமல் வாழ்க
இள மானே உன்னோடு
நிழல் போலே பின்னோடு வருவேன் நானே
தேன் தூங்கும் பூவே
வாடாமல் வாழ்க
பாவேந்தர் பாடிய பாடல்
மகளே உன் வார்த்தை தானோ
மூவேந்தர் மாளிகை தீபம்
மகளே உன் பார்வை தானோ
பாவேந்தர் பாடிய பாடல்
மகளே உன் வார்த்தை தானோ
மூவேந்தர் மாளிகை தீபம்
மகளே உன் பார்வை தானோ
நெஞ்சே பொன்னூஞ்சல் போலே
செல்வமே வந்து ஆடு
சேயும் தாயும் நாளெல்லாம்
சேர்ந்து வாழலாம்
தேன் தூங்கும் பூவே
வாடாமல் வாழ்க
ஆகாயம் பூமி அனைத்தும்
நீயாகத் தோன்றுதம்மா
நான் காணும் கனவுகள் உன்னால்
நிறைவேறக் கூடுமம்மா
ஆகாயம் பூமி அனைத்தும்
நீயாகத் தோன்றுதம்மா
நான் காணும் கனவுகள் உன்னால்
நிறைவேறக் கூடுமம்மா
நீயே இங்கில்லையானால்
மண்ணில் நான் வாழ்வதேது
நேரம் காலம் மாறலாம்
நேசம் மாறுமோ
தேன் தூங்கும் பூவே
வாடாமல் வாழ்க
பால் வெண்ணிலாவே தேயாமல் வாழ்க
இள மானே உன்னோடு
நிழல் போலே பின்னோடு வருவேன் நானே
தேன் தூங்கும் பூவே
வாடாமல் வாழ்க