Thiraiyoadu Thoorigai |
---|
திரையோடு தூரிகை பிறையோடு தாரகை இதழ் கூடும் போதிலே உன்னோடு நான்
தலையோடு பாதிகை இருளோடு தீபிகை இதழ் கூடும் போதிலே உன்னோடு நான்
தீ இன்றியே உண்டாக்கும் சூடென தீண்டாமலே ஒரு முத்தம் இது
காலமே நீ உறைந்தே இனி போவாயோ ராதே ஷ்யாம் காலமே நீ கரைந்தே பனி ஆவாயோ ராதே ஷ்யாம்
மலை முகடும் முகில் உதடும் நாளெல்லாம் கூடும் போது கரை முதலும் அலை இதழும் வாழ்வெல்லாம் கூடும் போது
கிளை இலை மேலே மழையெனவோ மழலையின் நாவில் முலையெனவோ கிளியதன் மூக்கில் கனியெனவோ சிலை உடல் மூடும் பனியெனவோ எது போல நான் இதழ் கூடிட கேள்வியோடு நான் காதலோடு நீ பூமியே கொண்டாடுதே
காலமே நீ உறைந்தே இனி போவாயோ ராதே ஷ்யாம் காலமே நீ கரைந்தே பனி ஆவாயோ ராதே ஷ்யாம்
ராதே ஷ்யாம்