Thiruchendoorin Kadalorathil

Thiruchendoorin Kadalorathil Song Lyrics In English


திருச்செந்தூரின்
கடலோரத்தில் செந்தில்
நாதன் அரசாங்கம்
தேடி தேடி
வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும்
தெய்வாம்சம்

திருச்செந்தூரின்
கடலோரத்தில் செந்தில்
நாதன் அரசாங்கம்

அசுரரை வென்ற
இடம் அது தேவரைக் காத்த
இடம் ஆவணி மாசியிலும்
வரும் ஐப்பசி திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்
அன்பர் திருநாள் காணுமிடம்

திருச்செந்தூரின்
கடலோரத்தில் செந்தில்
நாதன் அரசாங்கம் தேடி
தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்

கோவிலின்
அருகினில் கூடிய
கூட்டங்கள் தலையா
கடல் அலையா
குழந்தைகள்
பெரியவர் அனைவரை
இழுக்கும் குமரனவன்
கலையா

கோவிலின்
அருகினில் கூடிய
கூட்டங்கள் தலையா
கடல் அலையா
குழந்தைகள் பெரியவர்
அனைவரை இழுக்கும்
குமரனவன் கலையா

திருச்செந்தூரின்
கடலோரத்தில் செந்தில்
நாதன் அரசாங்கம் தேடி
தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்

மங்கையரின்
குங்குமத்தை காக்கும்
முகம் ஒன்று
வாடுகின்ற
ஏழைகளை காணும்
முகம் ஒன்று

சஞ்சலத்தில்
வந்தவரை தாங்கும்
முகம் ஒன்று
ஜாதி மத
பேதமின்றி பார்க்கும்
முகம் ஒன்று


நோய் நொடிகள்
தீர்த்து வைக்கும் வண்ண
முகம் ஒன்று
நூறு முகம்
காட்டுதம்மா ஆறுமுகம்
இங்கு

மங்கையரின்
குங்குமத்தை காக்கும்
முகம் ஒன்று வாடுகின்ற
ஏழைகளை காணும்
முகம் ஒன்று சஞ்சலத்தில்
வந்தவரை தாங்கும் முகம்
ஒன்று ஜாதி மத பேதமின்றி
பார்க்கும் முகம் ஒன்று
நோய் நொடிகள் தீர்த்து
வைக்கும் வண்ண முகம்
ஒன்று நூறு முகம்
காட்டுதம்மா ஆறுமுகம்
இங்கு ஆறுமுகம் இங்கு

திருச்செந்தூரின்
கடலோரத்தில் செந்தில்
நாதன் அரசாங்கம் தேடி
தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்

பொன்னழகு
மின்னி வரும் வண்ண
மயில் கந்தா
கண்மலரில்
தன்னருளை காட்டி
வரும் கந்தா

பொன்னழகு
மின்னி வரும் வண்ண
மயில் கந்தா கண்மலரில்
தன்னருளை காட்டிவரும்
கந்தா

நம்பியவர் வந்தால்
நெஞ்சுருகி நின்றால்
கந்தா
முருகா

நம்பியவர் வந்தால்
நெஞ்சுருகி நின்றால் கந்தா
முருகா வருவாய் அருள்
தருவாய் முருகா