Thirumal Azhagan |
---|
ஹஹஹஹா (2)
திருமால் அழகன் பெருமான் ஒருவன்
தலைவனாக வர வேண்டும்
திருமால் அழகன் பெருமான் ஒருவன்
தலைவனாக வர வேண்டும்
இரவும் பகலும் உறவின் பொருளை
முழுமையாக பெற வேண்டும்
இரவும் பகலும் உறவின் பொருளை
முழுமையாக பெற வேண்டும்
அவன் யாரோ யார் அறிவாரோ
அடி தோழி நீ அறிவாயோ
அவன் யாரோ யார் அறிவாரோ
அடி தோழி நீ அறிவாயோ
வேழத்தின் தந்தம் போலே இரு தோள்கள் ஆட
ஆட ஆட ஆசை கூட
வானோடும் மின்னல் தான் இரு கண்ணில் ஓட
ஓட ஓட உன்னைத் தேட
வேதத்தின் சந்தம் போல் அவன் வார்த்தை பேச
பேச பேச தென்றல் வீச
வையத்தின் இன்பம் தான் அவன் உருவில் காண
காண காண பெண்மை நாண
கற்பனை செய்திடும் அற்புத நாயகன்
யார் தானம்மா
ஆஆஆ
மங்கலமே
ஆஆஆ
திருமால் அழகன் பெருமான் ஒருவன்
தலைவனாக வர வேண்டும்
இரவும் பகலும் உறவின் பொருளை
முழுமையாக பெற வேண்டும்
ஈரேழு சொர்க்கலோகமும் வீரம் வெல்ல
வெல்ல வெல்ல வேகம் செல்ல
மாந்தர்க்குள் தெய்வம் தானென யாரும் சொல்ல
சொல்ல சொல்ல நெஞ்சை அள்ள
சீரோடு தர்மசாஸ்திரம் மண்ணில் வாழ
வாழ வாழ நன்மை சூழ
வாரானோ புண்யமூர்த்தி தான் வாசல் தேடி
தேடி தேடி கானம் பாடி
கன்னியும் எண்ணிய காவியத்தேவன் யார் தானம்மா
ஆஆஆ
குங்கும கோலங்கள் சங்கமம் ஆகிடும் நாளேதம்மா
ஆஆஆ
இரவும் பகலும் உறவின் பொருளை
முழுமையாக பெற வேண்டும்
இரவும் பகலும் உறவின் பொருளை
முழுமையாக பெற வேண்டும்
அவன் யாரோ யார் அறிவாரோ
அடி தோழி நீ அறிவாயோ