Thirumanamam |
---|
திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
கூரை நாட்டு புடவை கட்டி
குனிந்திருப்பாளாம்
ஒரு கூடை நிறைய பூவை தலையில்
சுமந்திருப்பாளாம்
கூரை நாட்டு புடவை கட்டி
குனிந்திருப்பாளாம்
ஒரு கூடை நிறைய பூவை தலையில்
சுமந்திருப்பாளாம்
சேர நாட்டு யானை தந்தம்
போலிருப்பாளாம்
சேர நாட்டு யானை தந்தம்
போலிருப்பாளாம்
நல்ல சீரக சம்பா அரிசி போல
சிரிச்சிருப்பாளாம்
சிரிச்சிருப்பாளாம்
ஒஹோஹ் ஹோ ஹோய்
திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
செம்பருத்தி பூவை போல
செவந்திருப்பாளாம்
நைசு சிலுக்கு துணியை போல
காற்றில் அசைந்திருப்பாளாம்
செம்பருத்தி பூவை போல
செவந்திருப்பாளாம்
நைசு சிலுக்கு துணியை போல
காற்றில் அசைந்திருப்பாளாம்
செப்பு சிலை போல உருண்டு
திறந்திருப்பாளாம்
செப்பு சிலை போல உருண்டு
திறந்திருப்பாளாம்
நல்ல சேலம் ஜில்லா மாம்பழம் போல்
கனிந்திருப்பாளாம்
திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தில் வந்தவள் யார்
கூறடியம்மா
அவள் உடனிருந்த மாப்பிள்ளைதான்
யாரடியம்மா
ஊர்வலத்தில் வந்தவள் யார்
கூறடியம்மா
அவள் உடனிருந்த மாப்பிள்ளைதான்
யாரடியம்மா
மாலை சூடும் மணமகளும்
நீதான்டியம்மா
மாலை சூடும் மணமகளும்
நீதான்டியம்மா
இந்த மணமகனை கண் திறந்து பாரடியம்மா
பாரடியம்மா
பாரடியம்மா
ஓஹோஹோஹோஹோய் ஓஹோ
திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்