Thirumangalyam Kollum

Thirumangalyam Kollum Song Lyrics In English


ராமா ராமா ராமா
திருமாங்கல்யம் கொள்ளும் முறை இல்லையோ
உள்ளம் அறியாத மாங்கல்யம் தவறில்லையோ
திருமாங்கல்யம் கொள்ளும் முறை இல்லையோ
உள்ளம் அறியாத மாங்கல்யம் தவறில்லையோ

கண்ணை மூடிக் கட்டும் தாலி சதமா
இந்தக் கல்யாணம் உனக்கே சம்மதமா
கண்ணை மூடிக் கட்டும் தாலி சதமா
இந்தக் கல்யாணம் உனக்கே சம்மதமா
ஏற்கவோ எடுக்கவோ நீயே சொல்
ராமா ராமா ராமா

மணமேடை மீது அணியாதபோதும்
மாங்கல்யம் என்றும் புனிதம்
மனதாலும் அவனை நினையாதபோதும்
அவன் தந்த தாலி அமுதம்
கழற்றினாலும் இதை அகற்றினாலும்
இனி கன்னியாவதில்லை மகளே
கணவன் என்றவன் ஆனப் பின்பு
இதைக் காக்க வேண்டும் குல மகளே

அன்னை ஜானகியே அந்த ராமப்பிரான்
தந்த தாலியல்ல இந்த தாலி
அன்னை ஜானகியே அந்த ராமப்பிரான்
தந்த தாலியல்ல இந்த தாலி
இது ஆத்திரத்தில் வந்த அவசரத்தில்
என்னை சிறையிடவே வந்த தாலி
இதைத் தாங்கிக் கொண்டால் நான் பாவி

கண்ணை மூடிக் கட்டும் தாலி சதமா
இந்தக் கல்யாணம் உனக்கே சம்மதமா
திருமாங்கல்யம் கொள்ளும் முறை இல்லையோ
உள்ளம் அறியாத மாங்கல்யம் தவறில்லையோ
கண்ணை மூடிக் கட்டும் தாலி சதமா
இந்தக் கல்யாணம் உனக்கே சம்மதமா


மலர் மாலைதனை சிலை மீது சூடி
வழிப்பாடு செய்யும் குலமே
சிலைதனைக் கேட்டு ஒருபோதும்
அந்த மலர் சூடவில்லை மனமே
ஒருவன் அணிவதென்ன ஒருத்தி பெறுவதென்ன
முடிந்து போன கதை மகளே
அவனை நீங்கி நீ வாழ்ந்தபோதும்
இனி இதனை நீக்குவது தவறே

இவள் யாருக்கென்றே அந்த தேவனவன்
விதி வகுத்து விட்டான் அந்த நாளில்
அதை மாற்றிடவோ இல்லை மறுத்திடவோ
வழியில்லையம்மா இந்த நாட்டில்
இது தாயின் வழி வந்த பண்பு

இந்த பண்பாடு மறையாதது அது
உன்னோடு முடியாதது
இந்த மண்ணோடு உறவானது