Thirumuga Ezhilai Thirudi Kondathu |
---|
திருமுகயெழிலைத் திருடிக்கொண்டது
தாமரையது
திருமுகயெழிலைத் திருடிக்கொண்டது
அதனால் நானே பெரியவனென்றது
தாமரையது
அதனால் நானே பெரியவனென்றது
மருவொடு தேசார் வனரோஜா
மலரென்ன சொன்னது
மருவொடு தேசார் வனரோஜா
மலரென்ன சொன்னது
கருவிழி மாதின் கன்னச் சிவப்பைக்
கவர்ந்தேன்
அதனால் பெருமை எனதே என்றது
கருவிழி மாதின் கன்னச் சிவப்பைக்
கவர்ந்தேன்
அதனால் பெருமை எனதே என்றது
கதையின் முடிவு தானெது
கலகம் தீர்ந்தது மலர்களின்
கலகம் தீர்ந்தது
மற்று மொரு கள்வன் வந்து
சேர்ந்ததால்
கலகம் தீர்ந்தது மலர்களின்
கலகம் தீர்ந்தது
சண்டை தீர்த்த திருடன்
திருடினதேதது
சண்டை தீர்த்த திருடன்
திருடினதேதது
சாம் ராஜ்ய யுவராணியின்
மனது தானது
சாம் ராஜ்ய யுவராணியின்
மனது தானது
சரிதான் பிறகென்ன நடந்தது
சல்லாப எழில் மயிலே அது தெரியாது
சொல்லவா நான் சொல்லவா
நடந்ததை நான் சொல்லவா
பொல்லாத கள்ளனை
மனந்திருடிய மூன்றாவது கள்ளனை
ராணி சிறையில் தள்ளி மூடினாள்
மஹாராணி சிறையில் தள்ளி மூடினாள்
சொல்லுவாய் மானே
சிறை உள்ள இடந்தானே
அதை சொல்லுவாய் மானே
உள்ள மென்னும் சிறையில் அந்த
உள்ள மென்னும் சிறையில் அந்த
கள்ளனை நான் வைத்த விதம் தான்
சொல்லவா நான் சொல்லவா சுகுமாரா
சொல்லவா இன்னும் சொல்லவா