Thirunaal Indru Pol Endrum |
---|
திருநாள் இன்று போல் என்றும் காணுங்களேன்
தினமும் அன்பினால் ஒன்று கூடுங்களேன்
ஆனந்தம் என்னும் தீபங்கள் கோடி
எங்கெங்கும் கண்டேன் கண்களிலே
நான் கண்ட கோலம் மாறாமல் இங்கே
என்றென்றும் காண்பேன் நெஞ்சினிலே
திருநாள் இன்று போல் என்றும் காணுங்களேன்
தினமும் அன்பினால் ஒன்று கூடுங்களேன்
அழகான திருக்கோவில் மனமாகலாம்
அன்பென்னும் மணியோசை அதில் கேட்கலாம்
அழகான திருக்கோவில் மணமாகலாம்
அன்பென்னும் மணியோசை அதில் கேட்கலாம்
தமிழோடு இசை சேர்த்து தினம் பாடலாம்
தாயென்றும் சேயென்றும் உறவாடலாம்
திருநாள் இன்று போல் என்றும் காணுங்களேன்
தினமும் அன்பினால் ஒன்று கூடுங்களேன்
எல்லோர்க்கும் எதிர்காலம் உருவாகலாம்
எல்லோரும் சமமாக நலம் காணலாம்
நல்லோர்கள் மொழியே நம் வழியாகலாம்
நாமென்றும் அவ்வழியே தினம் செல்லலாம்
திருநாள் இன்று போல் என்றும் காணுங்களேன்
தினமும் அன்பினால் ஒன்று கூடுங்களேன்
ஆனந்தம் என்னும் தீபங்கள் கோடி
எங்கெங்கும் கண்டேன் கண்களிலே
நான் கண்ட கோலம் மாறாமல் இங்கே
என்றென்றும் காண்பேன் நெஞ்சினிலே