Thirutheril |
---|
திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்
திருத்தேரில் வரும் சிலையோ
மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் தரும் சுகம்
மணமேடை வரும் கிளியோ
தாலாட்டு கேட்கின்ற மழலை இது
தண்டோடு தாமரை ஆடுது
சம்பங்கி பூக்களின் வாசம் இது
சங்கீத பொன் மழை தூவுது
ராகங்களில் மோஹனம் மேகங்களில் நாடகம்
உன் கண்கள் எழுதிய காவியம்
என் இதய மேடைதனில் அரங்கேற்றம்
மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் தரும் சுகம்
திருத்தேரில் வரும் சிலையோ
செந்தூர கோவிலின் மேளம் இது
ஸ்ருங்கார சங்கீதம் பாடுது
சில்லென்ற தென்றலின் காலம் இது
தேனோடு செந்தமிழ் பேசுது
தீபம் தரும் கார்த்திகை
தேவன் வரும் மார்கழி
என் தேவன் அனுப்பிய தூதுவன்
நான் தினமும் பார்த்திருக்கும் திருக்கோலம்
திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்
மணமேடை வரும் கிளியோ