Thoduvadhenna Thendralo Malargalo |
---|
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ
உடலெங்கும் குளிராவதென்ன
என் மனமெங்கும் நெருப்பாவதென்ன
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ
தேரில் ஏறி தேவதை வந்து
இங்கு நீரில் ஆடும் என்னுடன் நின்று
தேரில் ஏறி தேவதை வந்து
இங்கு நீரில் ஆடும் என்னுடன் நின்று
உடல் தேய்த்து விட்டாளோ
முகம் பார்த்து விட்டாளோ
உடல் தேய்த்து விட்டாளோ
முகம் பார்த்து விட்டாளோ
இன்று சித்திர முத்தங்கள்
சிந்திய ரத்தினம் யாரோ
அவள் யாரோம்ம்ம்ம் ஆஆஆஆ
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ
காமதேனு பால் கறந்தாளோ
அதில் கன்னி மங்கை தேன் கலந்தாளோ
அதை நடக்க விட்டளோ
என்னை மிதக்க விட்டளோ
அதை நடக்க விட்டளோ
என்னை மிதக்க விட்டளோ
இளம் சிட்டு முகம் கொண்ட
பொட்டு குலமகள் யாரோ
அவள் யாரோ ம்ம்ம்ம் ஆஆஆஆ
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ
உடலெங்கும் குளிராவதென்ன
என் மனமெங்கும் நெருப்பாவதென்ன
ஹஹஹா
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ